ஜனாதிபதி தேர்தல்.. எதிர்க்கட்சிகள் குழு அமைத்து ஆலோசனை.. வேட்பாளர் தேர்வில் பாஜக தீவிரம்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் குழு அமைத்து ஆலோசனை நடத்தி வருவதால் பாஜக தரப்பில் வேட்பாளரை தேர்வு செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.
டெல்லி: டெல்லியில் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய 9 கட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது என்று குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், இடது சாரி கட்சிகள், திரிணமுல் காங்கிரஸ் உட்பட 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. இந்தக் குழுவால் பாஜக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.

எப்படியும் காங்கிரஸ் கட்சியை சரிக்கட்டி, ஜனாதிபதி தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்று பாஜக திட்டமிட்டிருந்தது என்றும் அது இப்போது செல்லுபடியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாஜக சார்பில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு வரும் வெள்ளிக்கிழமை, காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளது.
இந்தக்குழு ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் படேல் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின், சதிஷ் மிஸ்ராவுடன் ஆலோசனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், டெல்லியில் பாஜக மூத்த தலைவர்களும் இன்று ஆலோசனை நடத்தினர். அப்போது அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு, அருண் ஜெட்லி ஆகியோர் ஜனாதிபதி தேர்தல் குறித்து விளக்கமளித்தனர்.
பிரதமர் மோடி வரும் 24ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். அதனால் பாஜக சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை வரும் 23ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது. அறிவிக்கப்படும் வேட்பாளர் அன்றே தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார் எனவும் கூறப்படுகிறது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications