செம்மரம் வெட்டச்சென்ற தமிழர்கள் கைது: அரைநிர்வாணமாக ஆந்திரா சிறையில் சித்ரவதை
திருப்பதியில் செம்மரம் வெட்ட சென்றதாக கைது செய்யப்பட்ட தமிழர்கள் அரை நிர்வாணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடப்பா: ஆந்திரா மாநிலத்தில் செம்மரம் வெட்ட சென்றதாக கைது செய்யப்பட்ட தமிழர்கள் அரை நிர்வாணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆந்திர போலீசார் சித்தரவதை செய்வதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த 13 தேதி கடப்பா மாவட்டத்தில் இருந்து சித்தூருக்கு 3 பேருந்துகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சென்று கொண்டிருந்த போது பலாப்பள்ளி சோதனைச்சாவடி அருகே ஆந்திர போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர்.

அப்போது தப்பியோடிய தமிழர்கள் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிடிப்பட்ட தமிழர்கள் ரயில்வே கூடுர் காவல்நிலையத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஆந்திர போலீசார் அடித்து துன்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிடிப்பட்ட தமிழர்களிடம் எங்கு வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறித்து ஆந்திர போலீசார் கூற மறுத்துவிட்டனர்.
இதனிடையே குறுகிய அறையில் அடைத்து ஆந்திர போலீசார் சித்தரவதை செய்வதாக தமிழர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
செம்மரங்களை வெட்ட வந்ததற்கு ஆதரமில்லாதாக நிலையில் பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கு செல்லும் தமிழக கூலித் தொழிலாளர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications