சொல்லியடித்த மம்தா... மேற்குவங்க இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் பாஜக படுதோல்வி
கொல்கத்தா: மேற்குவங்கத்தின் ஒரு மக்களவை மற்றும் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜகவை வீழ்த்தி திரிணாமூல் காங்கிரஸ் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளது.
மேற்கு வங்கத்தின் அசான்சோல் மக்களவைத் தொகுதி, பல்லிகுங்கே சட்டப்பேரவைத் தொகுதி, சத்தீஸ்கரின் கைராகர் சட்டப்பேரவைத் தொகுதி, பீகாரின் போசாஹன் சட்டப்பேரவைத் தொகுதி, மகாராஷ்டிராவின் கோலாப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் மேற்கு வங்கத்தின் அசான்சோல் மக்களவைத் தொகுதி, பல்லிகுங்கே சட்டப்பேரவைத் தொகுதிகளின் முடிவுகள் உற்று நோக்கப்பட்டன.

மேற்கு வங்க அரசியல்
அதற்கு முக்கிய காரணம் அம்மாநிலத்தில் அரங்கேறிய அண்மைகால அரசியல் நிகழ்வுகள். மேற்குவங்க ஆளுநருக்கும் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் இடையிலான மோதல், மேற்கு வங்க அரசுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகள், மாநிலங்களில் ஏற்பட்ட குற்றச்செயல்களால் இந்த இடைத் தேர்தல் முடிவுகளை மாநில மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அசான்சோல் மக்களவைத் தொகுதி
இதில், அசான்சோல் மக்களவைத் தொகுதி எம்.பியாக இருந்த பாஜகவை சேர்ந்த பாடகர் பபுல் சுப்ரியோ கடந்த 2021 ஆம் ஆண்டு அக்கட்சியை விட்டு விலகினார். இதனால் அவரது எம்.பி பதவியும் பறிபோனது. இதனை தொடர்ந்து அசான்சோல் மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

சத்ருகன் சின்ஹா
இதனை தொடர்ந்து நடைபெற்ற இடைத் தேர்தலில், பாஜகவிலிருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சத்ருகன் சின்ஹா அக்கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து பாஜகவை சேர்ந்த அக்னிமித்ரா பால் போட்டியிட்டார்.

பல்லிகுங்கே சட்டப்பேரவைத் தொகுதி
அதேபோல், மேற்கு வங்க அமைச்சராக இருந்த சுப்ரதா முகர்ஜி கடந்த ஆண்டு காலமானதை தொடர்ந்து அவரது பல்லிகுங்கே சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், பாஜகலிருந்து விலகிய பபுல் சுப்ரியோவை வேட்பாளராக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி நிறுத்தியது.

இரண்டிலும் திரிணாமூல் வெற்றி
இன்று நடைபெற்று முடிந்த வாக்கு எண்ணிக்கையில், அசான்சோல் மக்களவைத் தொகுதியில் சத்ருகன் சின்ஹா பாஜக வேட்பாளரை விட 3 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று பிரமாண்ட வெற்றிபெற்றார்.
அதேபோல் பல்லிகுங்கே சட்டப்பேரவைத் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் பபுல் சுப்ரியோ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சாய்ரா ஷா ஹலிமைவிட 20,030 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். அந்த தொகுதியில் பாஜக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications