உத்தராகண்ட் தேர்தலுக்கான பிரதமர் மோடியின் டிஜிட்டல் பிரச்சாரம் திடீர் ரத்து! விஷயம் இதுதான்
டேராடூன்: உத்தரகாண்ட் சட்டசபைத் தேர்தலுக்காக பிரதமர் மோடி செய்யவிருந்த டிஜிட்டல் பிரசாரம் வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் வரும் 10ம் தேதி துவங்கி நடக்கவிருக்கிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 சட்டமன்ற தொகுத்கள் உள்ளது. உத்தரகாண்ட் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெறுகிறது, முடிவுகள் மார்ச் 10-ஆம் தேதி அறிவிக்கப்படும்.

உத்தரகாண்ட்
2017 சட்டசபைத் தேர்தலில் உத்தரகாண்டில் பாஜக 57 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இம்முறை 60க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக உள்ளது. இதையடுத்து, சட்டமன்றத் தேர்தலுக்கான மெகா பரப்புரையை பாஜக தொடங்கியிருக்கிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி நேரடி மற்றும் காணொலி பரப்புரைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பாஜக செய்துள்ளது.

டிஜிட்டல் பிரசாரம்
பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் அனைவரும் நேரடி மற்றும் காணொலி முறையில் பொது பேரணிகளில் உரையாற்றுவார்கள். டிஜிட்டல் பிரச்சாரத்துக்காக ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 15 இடங்களில் பிரமாண்டமான எல்இடி திரைகள் நிறுவப்பட்டுள்ளன, இதன் மூலம் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் காணொலி வாயிலான பேச்சினை மக்கள் கேட்க முடியும் என்று மாநில பாஜக தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி
உத்தரகாண்ட் தேர்தலுக்காக பிரதமர் மோடி இன்று காலை டிஜிட்டல் முறையில் பிரசாரம் மேற்கொள்ளவிருந்தார். ஆனால் மோசமான வானிலை காரணமாக இந்த டிஜிட்டல் பிரசாரம் ரத்து செய்யப்படுவதாக மாநில பாஜக தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையிக், உத்தரகாண்டில் மோசமான வானிலை காரணமாக பிரதமரின் பிரசாரம் தடைபட்டுள்ளதால் பாஜக-வினர் சோகத்தில் உள்ளனர்.

வானிலை
உத்தரகாண்ட் சட்டசபைத் தேர்தலில் இன்றைய பிரசாரத்தில் அல்மோரா, மகேஸ்வர்,கம்பவாத், பித்ரோகர் உள்ளிட்ட சட்டசபைத் தொகுதிகளில் டிஜிட்டல் பிரசாரம் செய்யவிருந்தார். இதற்காக பல்வேறு இடங்களில் ஐம்பது ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் எல்.இ.டி அமைத்து இந்த பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். உத்தரகாண்டில் அடிக்கடி மாறிவரும் வானிலையால் தேர்தல் பிரசாரங்களும் பொதுக்கூட்டங்களும் தடைபட்டு வருகின்றன.
-
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications