2ஜி தீர்ப்பில் ஒரு ஆச்சரியம் உள்ளது.. பிரபல பத்திரிகையாளர் கருத்து
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பை, கீழமை நீதிமன்றம் தடுத்திருப்பது ஆச்சரியம் அளிப்பதாக பிரபல பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாயி தெரிவித்துள்ளார்.
2ஜி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பல்வேறு நிறுவனங்களின் லைசென்சை ரத்து செய்தது. ஆனால் 2ஜி முறைகேடு குறித்து விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றமோ, முறைகேடுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்துள்ளது.
இதுகுறித்து ராஜ்தீப் சர்தேசாயி கூறியுள்ளதாவது:
அரசியல், நீதிமன்ற தீர்ப்பை மறந்துவிடலாம். 2ஜியின் உண்மைகள் இவைதான். 1) 2ஜி கொள்கை முறைகேடானது இல்லை. 2) அதன் நிர்வாகம் தனிப்பட்ட ஊழல்களுக்கு வழி வகுத்திருக்கலாம். 3) ஊழல் மதிப்பு 1,76,000 கோடிகள் இல்லை. 4) இது லைசென்ஸ் ஊழல், அலைக்கற்றை ஊழல் இல்லை. புரிந்ததா??
Forget the political rhetoric and court ruling, The truth of 2 G: A) 2 G policy was not flawed b) the administration of it may have led to individual corruption c) the corruption was not Rs 1,76,000 crores d) it was a license scam not a spectrum scam . Make sense??
— Rajdeep Sardesai (@sardesairajdeep) December 21, 2017
இவ்வாறு கூறியுள்ள அவர் மற்றொரு டுவிட்டில், உச்சநீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பை, கீழமை நீதிமன்றம் தடுத்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது என தெரிவித்துள்ளார். மொத்தத்தில் யார் குற்றவாளி என நிரூபிக்கப்படாமல் முடிந்துள்ளது வழக்கு.
Will be surprised if lower court judgement holds in a higher court. What will we say then? 😄 #2GCaseVerdict
— Rajdeep Sardesai (@sardesairajdeep) December 21, 2017