திக்..திக்.. மண்டை ஓடு குவியலால் ஒரு கோபுரம்.. மாயன் கால நரபலி இதுதானா?
மெக்ஸிகோவில் நூற்றுக்கணக்கான மண்டை ஓடுகளால் கட்டப்பட்ட கோபுரத்தை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மெக்ஸிகோ: நூற்றுக்கணக்கான மனித மண்டை ஓடுகளால் கட்டப்பட்ட கோபுரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மாயன் வம்ச காலக் கட்டத்தில் இருந்ததாக கருதப்படும் நரபலியை உறுதி செய்வதாக உள்ளது என தொல் பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பழங்கால மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்திருக்கும் அவர்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்பது குறித்து உலகின் ஒவ்வொரு மூலையிலும் அனுதினமும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
எகிப்து பிரமிடுகள் உட்பட புராதன சின்னங்கள் உள்ள ஒவ்வொரு இடத்திலும் தொல்லியல் துறையிளர் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதன் பதிலாக கிடைத்ததுதான் மாயன் வம்ச தகவல்கள், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்தின் மம்மிக்கள் உள்ளிட்ட பல.

அச்சுறுத்தும் மண்டை ஓடு கோபுரம்
இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக முற்றிலும் மனித தலைகளால் உருவாக்கப்பட்ட கோபுரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தும் கோபுரம் மெக்ஸிகோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

676 மண்டை ஓடுகளால்
மெக்சிகோ தலைநகரில் பழங்கால அஸ்டெக் கோவில் அமைந்துள்ள பகுதியில் தொல்லியர் ஆய்வாளர்கள் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது அங்கு 676 மனித மண்டை ஓடுகளால் ஆன கோபுரம் ஒன்றை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மாயன் கால நரபலி
இது மாயன் வம்ச கால கட்டத்தில் நரபலி கலாச்சாரம் இருந்துள்ளதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது எனவும் தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அஸ்டெக் மற்றும் மெசோமெரிக்கன் மக்கள் சூரிய கடவுளுக்கு நரபலி அளித்து வந்துள்ளது வரலாற்றாசிரியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் ஆக்கிரமிப்பில் இருந்து..
இந்நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மண்டை ஓடுகளால் ஆன கோபுரமானது ஸ்பெயின் நாட்டவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து அப்போதைய குடிமக்களை காக்கும் பொருட்டு அமைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த மண்டை ஓடுகள் வரிசை அடுக்கப்பட்டும் சுவற்றில் புதைக்கப்பட்டும் கோபுரமாக கட்டப்பட்டுள்ளது.

பெண்கள், குழந்தைகள் மண்டை ஓடு..
ஆண்கள், இளைஞர்கள் மட்டுமின்றி பெண்கள் மற்றும் குழந்தைகள் பலரின் மண்டை ஓடுகளும் இந்த கோபுரத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் போர்படை வீரர்களாக இருந்திருக்கலாம் ஏதாவது போரின் போது கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஒன்று மட்டும் ஸ்பானியர்..
மேலும் கண்டெடுக்கப்பட்டுள்ள மண்டை ஓடுகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் ஒரு மண்டை ஓடு மட்டும் ஸ்பெயினைச் சேர்ந்த ஒருவரது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மண்டை ஓடு கோபுரம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் தொல்லியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications