கென்ய பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தவ மாணவர்களை தேடிப்பிடித்து தலையை துண்டித்த தீவிரவாதிகள்
நைரோபி: கென்யாவில் உள்ள காரிசா பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் கிறிஸ்தவ மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.
ஆப்பிரிக்கா நாடான கென்யாவில் சோமாலியாவின் எல்லையையொட்டி உள்ள காரிசா பல்கலைக்கழகத்திற்குள் வியாழக்கிழமை அதிகாலை 4 முகமூடி அணிந்த தீவிரவாதிகள் நுழைந்தனர். அவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 147 பேர் பலியாகினர், 79 பேர் காயம் அடைந்தனர். பலியானவர்களில் மாணவர்களை தவிர 2 போலீஸ் அதிகாரிகள், ஒரு ராணுவ வீரர் மற்றும் 2 காவலாளிகள் அடக்கம்.

பல்கலைக்கழகத்திற்குள் தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகளையும் ராணுவத்தினர் 13 மணிநேரம் போராடி சுட்டுக் கொன்றனர். தீவிரவாதிகள் தங்கள் உடம்பில் குண்டுகளை கட்டியிருந்ததால் ராணுவத்தினர் சுட்டதும் அந்த குண்டுகள் வெடித்துச் சிதறின. தீவிரவாதிகள் பல்கலைக்கழக வளாகத்தில் தங்கியிருந்த கிறிஸ்தவ மாணவ, மாணவியராக தேடிப் பிடித்து கொலை செய்துள்ளனர். அதிலும் கிறிஸ்தவ மாணவர்கள் பலரை தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.
அவர்கள் அதிகாலை தாக்குதல் நடத்தியபோது பல்கலைக்கழக வளாகத்தில் தொழுது கொண்டிருந்த முஸ்லீம் மாணவர்களை தீவிரவாதிகள் எதுவும் செய்யவில்லை. இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இந்த தாக்குதலுக்கு திட்டம் தீட்டிக் கொடுத்த அல் ஷபாப் தீவிரவாதி முகமது மகமூது என்ற துல்யாதின் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.1 கோடியே 33 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று கென்ய அரசு அறிவித்துள்ளது.
கென்ய மண்ணில் கடந்த 17 ஆண்டுகளில் நடந்த கொடூர தீவிரவாத தாக்குதல் இது தான். முன்னதாக 1998ம் ஆண்டு நைரோபியில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தீவிரவாதிகள் குண்டு வைத்து தாக்கியபோது 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications