இந்து கோயில் மீது தாக்குதல்... கடும் நடவடிக்கை எடுக்க பாக். பிரதமர் ஆணை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்து கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பெரும்பான்மையினராக முஸ்லீம்கள் உள்ளார்கள். அங்கு மொத்தம் உள்ள 22 கோடி மக்கள் தொகையில், 2 சதவீதம் பேர் மட்டுமே இந்துக்கள் ஆவார். அவர்களில் பெரும்பாலான மக்கள் சிந்து மாகாணத்தில் வசிக்கிறார்கள்.

இந்நிலையில், சிந்து மாகாணத்தின் கைர்பூர் மாவட்டத்தின் கும்ப் நகரில் இந்து கோயிலில் புகுந்த மர்ம நபர்கள் சாமி சிலைகள் மற்றும் புனித நூல்களை தீயிட்டு கொளுத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீடுகள் நிறைந்த பகுதியில் அமைந்திருந்த அந்த கோயில் தாக்கப்பட்ட போது, யாரும் அதை தடுக்க முன்வரவில்லை.
இந்த விவகாரம் இந்து மக்களிடையே கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது, இதையடுத்து கோயிலை சேதப்படுத்திவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் பாகிஸ்தானில் போராட்டம் நடத்தினர்.
அப்போது இந்து கோயில்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து இந்து கோயில் தாக்குதல் விவகாரம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் கவனத்துக்கு சென்றது. கோயிலை தாக்கியவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிந்து மாகாண போலீசாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் குரான் நமக்கு போதித்த பண்புகளுக்கு எதிரானது என்றும் அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இந்து கோயில் தாக்கப்பட்ட விவகாரத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications