லண்டன் பள்ளியில் குழந்தை பெற்ற இந்திய ஆசிரியை: வகுப்பறைக்கு குழந்தை பெயர்
லண்டன்: லண்டனில் இந்திய ஆசிரியை ஒருவருக்கு வகுப்பறையிலேயே குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தைக்கு பெற்றோர் ஜோனா எனப் பெயர் சூட்டியதால், பிரசவம் நடந்த அறைக்கு ஜோனா வகுப்பறை எனப் பெயரிட்டது பள்ளி நிர்வாகம்.
இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணி புரிந்து வருகிறார் இந்தியாவை சேர்ந்த டயானா கிரிஷ் என்ற 30 வயதுப் பெண். இவரது கணவர் பெயர் விஜய் வீரமணி. இத்தம்பதிகளுக்கு ஏற்கனவே ஒன்றரை வயதில் நோவா என்ற ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்தார் டயானா. நிறைமாத கர்ப்பிணியான டயானா, கடந்த வெள்ளிக்கிழமை முதல் பிரசவ விடுப்பு எடுக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்கு முதல் நாள் பள்ளிக்குச் சென்ற டயானாவுக்கு, பள்ளியிலேயே வைத்து பிரசவ வலி ஏற்பட்டது.
சக ஆசிரியைகளிடம் விவரம் தெரிவித்த டயானா உடனடியாக தன்னை வந்து அழைத்துச் செல்லும் படி கணவருக்கும் போன் செய்துள்ளார். ஆனால், அதற்குள் வலி அதிகரிக்கவே பள்ளி நிர்வாகம் உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால், ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னதாகவே வகுப்பறையிலேயே டயானாவுக்கு குழந்தை பிறந்து விட்டது. அழகிய அந்தக் குழந்தைக்கு ஜோனா எனப் பெயரிட்டனர் பெற்றோர். அதனைத் தொடர்ந்து ஜோனா பிறந்த வகுப்பறைக்கு ‘ஜோனா வகுப்பறை' எனப் பெயர் சூட்டியது பள்ளி நிர்வாகம்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications