சொந்த ஊர் போகணும்.. பயணிகளுடன் அரசு பேருந்தை திருடிச் சென்ற இளைஞர் கைது!
மகாராஷ்டிராவில் அரசு பேருந்தை பயணிகளுடன் திருடிச் சென்று விபத்தில் சிக்க வைத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை: மஹாராஷ்டிராவில் டிப்போவில் நின்றிருந்த அரசுப் பேருந்தை பயணிகள் சிலருடன் திருடிச் சென்று, மரத்தில் மோதி விபத்தை உண்டாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மஹாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் பொய்சரில் உள்ள டெப்போவில் பயணிகள் சிலருடன் அரசுப் பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அப்பேருந்தின் நடத்துனரும், ஓட்டுநரும் டெப்போவின் உள்ளே பணி நிமித்தம் சென்றிருந்தனர்.

அப்போது அங்கு வந்த சபிர் அலி (31) என்ற இளைஞர், பேருந்தின் ஓட்டுநர் இருக்கையில் ஏறி அமர்ந்து பேருந்தை இயக்கத் தொடங்கினார். இதனால் அப்பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தாறுமாறாக பேருந்தை ஓட்டிய சபிர், சிறிது தூரத்தில் இருந்த மரத்தில் மோதினார். இதனால் பேருந்து விபத்தில் சிக்கியது. ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நல்லவேளையாக உயிர் பிழைத்தோம் என பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேறினர்.
அதற்குள்ளாக பேருந்தைத் துரத்தி வந்த அப்பேருந்தின் நடத்துனரும், ஓட்டுநரும், சபீரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் சபீர் பால்கரில் வசித்து வருகிறார் என்றும், உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக அவர் பேருந்தை திருடியதும் தெரிய வந்துள்ளது.
அவர் மீது திருட்டு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் உண்மையிலேயே சொந்த ஊர் செல்லத்தான் அவர் பேருந்தை ஓட்டிச் சென்றாரா அல்லது பயணிகளைக் கொல்லும் திட்டம் ஏதும் வைத்திருந்தாரா என்பதைக் கண்டறிய தொடர்ந்து சபீரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, அவரது மனநிலை தெளிவு குறித்த மருத்துவ சோதனையும் நடத்தப்பட்டுள்ளது.
பேருந்தை திருடிச் செல்ல முற்பட்டு, விபத்து ஏற்பட்ட சம்பவம் பொய்சரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிராவில் பேருந்தை திருடிச் செல்வது இது முதல்முறையல்ல, கடந்த 2012ம் ஆண்டு இதே போன்று காலியாக நின்ற அரசு பேருந்தை ஓட்டுநர் ஒருவர் திருடிச் சென்று விபத்துக்குள்ளாக்கியதில், 8 பேர் கொல்லப்பட்டனர், 29 பேர் காயமடைந்தனர். ஏறக்குறைய 24க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த விபத்தில் சேதமடைந்தது நினைவு கூரத்தக்கது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications