அனைவருக்கும் பொதுமன்னிப்பு- பெண்களுக்கு உரிமை- நாடுகளுடன் பகைமை இல்லை- தாலிபான்கள் திடீர் அறிவிப்பு
காபூல்: அன்னிய படைகளுடன் தங்களை எதிர்த்து போரிட்ட அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்குகிறோம்; பெண்களுக்கும் உரிமைகள் வழங்கப்படும்; உலக நாடுகளுடன் பகைமையை விரும்பவில்லை என திடீரென தாலிபான்கள் அறிவித்து உள்ளது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
Recommended Video
ஆப்கானிஸ்தானை 20 ஆண்டுகால யுத்தத்துக்குப் பின்னர் தாலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறின. இதனையடுத்து தாலிபான்களுடன் ஆப்கான் படைகள் போரிடவில்லை.
இதனால் ஆப்கானிஸ்தான் முழுவதுமே 2 வாரங்களுக்குள் தாலிபான்கள் வசமாகிவிட்டது. தலைநகர் காபூல் இப்போது தாலிபான்கள் பிடியில் உள்ளது. ஆப்கான் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பி ஓடி ஓமனில் தஞ்சமடைந்துள்ளார்.

தப்பி ஓட்டம்
இதனிடையே 1990களில் தாலிபான்களின் ஆட்சி மிக கொடூரமானதாக இருந்தது. அதேபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படலாம் என அஞ்சி அந்நாட்டு பொதுமக்கள் சாரை சாரையாக நாட்டை விட்டு தப்பி ஓட காபூல் விமான நிலையம் நோக்கி படையெடுக்கின்றனர். விமான நிலையங்களில் ஆப்கானிஸ்தானியர்கள் அனுபவிக்கும் துயரங்கள் உலகை அதிர்ச்சி அடைய வைத்து வருகின்றன.

திடீர் பிரஸ் மீட்
இந்நிலையில் காபூலில் தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் செவ்வாய்க்கிழமையன்று செய்தியாளர்களுக்கு விரிவான பேட்டி கொடுத்தார். பொதுவாக தாலிபான்கள், ஊடகங்களை எதிர்கொள்வது இல்லை. இதனால் சபியுல்லா முஜாஹித்தின் நேற்றைய பேட்டி மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. சர்வதேச ஊடகங்களுக்கு சபியுல்லா முஜாஹித் அளித்த பேட்டி விவரம்:

அனைவருக்கும் பொதுமன்னிப்பு
தாலிபான்களுக்கு எதிராகப் போராடிய அனைவரையும் நாங்கள் மன்னித்துவிட்டோம். பிறருடனான அனைத்து பகைமைகளும் முடிவுக்கு வந்துவிட்டன. உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ எங்களுக்கு என எதிரிகள் யாரும் வேண்டாம். நாட்டில் இஸ்லாமிய அரசாங்கம் ஒன்றை சுமூகமான முறையில் அமைக்க இருக்கிறோம். காபூல் நகரத்தின் பாதுகாப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தாலிபான் படைகள் காபூல் நகரத்தின் பல பகுதிகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

காபூல் பாதுகாப்பாக இருக்கிறது
வெளிநாட்டு தூதரகங்களுக்கான பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்கிறோம். வெளிநாட்டு தூதரகங்கள் பாதுகாப்புடன் செயல்படலாம். காபூல் நகருக்குள் நாங்கள் நுழைந்த முதல் நாளில் எங்கள் படைகளை நகருக்கு வெளியே நிறுத்தி இருந்தோம். ஆனால் நிலைமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிலர் கொள்ளையடித்தல், சூறையாடல்களில் ஈடுபட்டனர். காபூல் நகரில் பொதுமக்கள் இப்போது பாதுகாப்பாகவே உள்ளனர்.

பெண்களுக்கு உரிமை உண்டு
இஸ்லாமிக் எமிரேட் ஆப்கானிஸ்தான் நாடு எந்த ஒரு நாட்டுக்கும் எதிரானது அல்ல. உலக நாடுகளுக்கு எதிரான சக்திகள் ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படவும் தாலிபான்கள் அனுமதிக்கமாட்டார்கள். இஸ்லாமிய மத கோட்பாடுகளுக்குட்பட்டு பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும். சுகாதாரத்துறை உள்ளிட்ட பல துறைகளில் பெண்களின் சேவை தேவையானது ஒன்று. தாலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு இருக்காது.

தேடுதல்கள் இருக்காது
மக்களின் வாழ்வாதாரங்களையும் நாட்டின் பொருளாதாரத்தையும் நாங்கள் மேம்படுத்துவோம். அனைவருக்குமே நாங்கள் பொதுமன்னிப்பு வழங்குகிறோம். அன்னிய படையினருடன் இணைந்து செயல்பட்ட முன்னாள் ராணுவத்தினர் உட்பட எவர் மீதும் பழிவாங்கும் நடவடிக்கை இருக்காது. வீடுகளுக்கு சென்று தேடுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளமாட்டோம். 20 ஆண்டுகால யுத்தத்தில் பொதுமக்கள், அவர்களது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட இழப்பு எதிர்பாராதது. எந்தவித உள்நோக்கத்துடனும் நிகழ்த்தப்பட்டதும் இல்லை. அப்படி ஏதேனும் நிகழ்வுகள் நடந்திருந்தால் அது துரதிருஷ்டவசமானது. காபூல் நகரத்தின் நிலைமை விரைவில் இயல்புக்கு திரும்பும்.

அன்றும் இன்றும் மாற்றம் உண்டு
1990களின் தாலிபான்களுக்கும் இப்போதைய தாலிபான்களுக்கும் தத்துவமும் நம்பிக்கைகளும் ஒன்றுதான். ஏனெனில் அனைவருமே முஸ்லிம்கள்தான். ஆனால் அனுபவரீதியான படிப்பினைகள் மூலம் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. எங்கள் நடவடிக்கைகள் அதனை வெளிப்படுத்தும். போதைப் பொருட்களை விளைவிக்கும் நாடாக ஆப்கானிஸ்தான் இருக்காது. போதைப் பொருட்களை விளைவிப்பதற்கு மாற்று நடவடிக்கைகளுக்கு உலக நாடுகளின் ஆதரவை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பி தங்களது அன்றாடப் பணிகளை மேற்கொள்ளலாம். ஊடகங்கள், தூதரகங்கள் தொடர்ந்து இயங்கலாம். ஆனால் ஆப்கானிஸ்தானின் தேச நலன்களுக்கு எதிராக செயல்படவும் கூடாது. நாட்டு மக்கள் யாரும் பாதுகாப்பு இல்லை என அஞ்சி வெளியேற வேண்டியது இல்லை. இவ்வாறு சபியுல்லா முஜாஹித் கூறினார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications