வட கொரியா-தென் கொரியா பேச்சுவார்த்தை தொடங்கியது... கொரிய தீபகற்பத்தில் அமைதி திரும்புமா?
இரண்டு வருட இடைவேளைக்கு பின்னர், இன்று வடகொரியா மற்றும் தென் கொரியா அதிகாரிகள் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பன்முன்ஜோம்: வடகொரியா - தென்கொரியா எல்லையில் உள்ள பொதுவான பகுதியில் இருநாட்டு அதிகாரிகளும் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சமீப காலமாக தொடர் ஏவுகணை சோதனைகள், அணு ஆயுத சோதனைகள், அச்சுறுத்தும் அறிக்கைகள் என மோசமான போக்கை கடைபிடித்து வரும் வடகொரியாவின் மீது உலக நாடுகள் கடும் அதிருப்தியில் உள்ளன. அண்டை நாடான தென் கொரியாவையும் வடகொரியா தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில், வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன், புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி உரையாற்றிய போது, தென் கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் குறித்து அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்தார்.
ஏற்கனவே, இந்த குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளை, அமைதிக்கான அடையாளமாக நடத்த தென் கொரியா திட்டமிட்டு வந்த நிலையில், வடகொரியாவின் அழைப்புக்கு உடனே இசைந்தது. இரு நாடுகளின் எல்லைக்கு அருகே உள்ள பன்முன்ஜோம் என்ற பகுதியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடைசியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன், இங்கு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
வடகொரிய ஒலிம்பிக்ஸ் வீரர்கள் மற்றும் அவர்களுக்கு செய்து கொடுக்கப்படும் வசதிகள் குறித்து இந்த பேச்சுவார்த்தையில் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பேச்சுவார்த்தை தொடர்வதால் 2000, 2004 மற்றும் 2006 ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் மற்றும் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் போல, இதிலும், இரண்டு நாட்டின் வீரர், வீராங்கனைகள் சேர்ந்தே நடந்து வருவது குறித்தும் வடகொரியா கோரிக்கை வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications