ஐ.எஸ்.ஐ.எஸ். கைப்பற்றிய யுரேனியத்தால் பெரிய அச்சுறுத்தல் இல்லை: அணுசக்தி வல்லுநர்கள்
பாக்தாத்: ஈராக் சன்னி முஸ்லிம்களின் ஆயுதப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ். வசம் சிக்கியிருக்கும் யுரேனியத்தால் பெரிய அளவிலான அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அணுசக்தித் துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஈராக்கில் உள்நாட்டு போரை நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் கடந்த மாதம் அந்நாட்டின் 2வது மிகப் பெரிய நகரமான மொசூலை கைப்பற்றியது. அப்போது அங்கு பல்கலைக் கழகம் ஒன்றில் இருந்த 40 கிலோ யுரேனியத்தையும் கைப்பற்றிச் சென்றனர் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர்.
இந்த யுரேனியத்தை வேறு பொருட்களுடன் கலந்து ஆயுதங்களை தயாரித்து பயங்கரவாத தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ். மேற்கொள்ளலாம் என்றும் இந்த ஆபத்தில் இருந்து சர்வதேச சமூகம் தங்களது நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றும் ஐ.நா.விடம் ஈராக் முறையிட்டது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சர்வதேச அணுசக்தி முகாமையானது, ஐ.எஸ்.ஐ.எஸ். வசம் சிக்கியிருப்பது சிறிய அளவிலான யுரேனியம்தான்.. அதை வைத்து பெரிய அளவிலான அணு ஆயுதம் எதுவும் தயாரிக்க முடியாது என்று கூறியுள்ளது.
மேலும் சர்வதேச அணுசக்தி முகாமையின் முன்னாள் அதிகாரி ஓல்லி ஹெய்னோன் இது பற்றி கூறுகையில், பல்கலைக் கழக ஆய்வகத்தில் பயன்படுத்தப்பட்ட யுரேனியத்தைத்தான் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் கைப்பற்றியுள்ளது. அதாவது அது கதிர்வீச்சை வெளிப்படுத்தும் திறனற்ற வகையில்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால் அந்த மூலப் பொருளில் இருந்து எந்த ஒரு கேடு விளைவிக்கும் ஆயுதத்தையும் தயாரித்துவிட முடியாது.. மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் அணுகுண்டுகளை எல்லாம் தயாரிக்கவே முடியாது என்கிறார்.
ஐ.நா. அதிகாரி
அதேபோல் 1990ஆம் ஆண்டு ஈராக்கில் அணு ஆயுதங்கள் இருக்கின்றனவா என்று சோதனை நடத்திய ஐ.நா.வின் முன்னாள் அதிகாரி போப் கெல்லி, நச்சுவாயுவை விட யுரேனியம் மிகவும் ஆபத்தானதுதான். யுரேனியம் கதிர்வீச்சை வெளிப்படுத்தக் கூடியது. அணுகுண்டுகளை இதை வைத்து தயாரிக்க முடியும் என்பது மோசமான கற்பனை. யுரேனியத்தை பெரிய அளவில் காற்றில் பரவவிட்டால் அது மறைந்துவிடும்.
இதன் மூலம் தயாரிக்கப்படும் குண்டுகள் வெடித்தால் நச்சு வாயுதான் வெளியே வரும். அதே நேரத்தில் பவுடர் தன்மையில் உள்ள சீசியம் 137 உடன் யுரேனியத்தை இணைத்து தண்ணீரில் கலந்தால்தான் மிக மோசமான விளைவு ஏற்படும்.
இவ்வளவு யுரேனியத்தை ஒரு பல்கலைக் கழகம் போருக்குப் பின்னரும் வைத்திருந்தது ஆச்சரியமளிக்கிறது. இந்த விவகாரத்தை ஐ.நா. பொதுச்செயலரிடம் கொண்டு செல்வதற்கு பதிலாக ஐ.நா.வின் அணு ஆயுத விவகார முகாமையிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும் என்றார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications