நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரண தொகை வழங்கிய அப்ரிடி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி தனது அறக்கட்டளையில் இருந்து ரூ.50 லட்சம் பணத்தை நிவாரணமாக வழங்கியுள்ளார்.
ஆப்கானிஸ்தானை மையம் கொண்டு நேற்று தாக்கிய நிலநடுக்கம் பாகிஸ்தானிலும் கடும் விளைவுகளை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் லேசான அதிர்வுகள் பல மாநில மக்களால் உணரப்பட்டன.

இந்த நில நடுக்கத்தால், பாகிஸ்தானில் 300க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அந்த நாட்டு டி20 கிரிக்கெட் அணி கேப்டனான ஷாகித் அப்ரிடி இன்று பெஷாவர் நகரிலுள்ள லேடி ரீடிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
மேலும், ஷாகித் அப்ரிடி அறக்கட்டளையில் இருந்து ரூ.50 லட்சம் பணத்தை, நிவாரண பணிகளுக்கு வழங்குவதாகவும் அறிவித்தார்.
இதனிடையே துபாயில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரின் 2வது போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை அந்த அணி வீரர்கள் கொண்டாடாமல் புறக்கணித்தனர். நிலநடுக்கத்தால் தங்கள் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளபோது, கொண்டாட்டத்தில் ஈடுபடுவதில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மொத்தமாக அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications