செத்தவன் பிழைத்து வந்த அதிசயம்.. புதின் முகத்தில் கரியை பூசி ₹4 கோடியை சுருட்டிய உக்ரைன் உளவாளிகள்
மாஸ்கோ: ரஷ்யாவைக் காலி செய்யும் வகையில் ஒரு அட்டகாசமான ஆபரேஷனை உக்ரைன் நடத்திக் காட்டியுள்ளது. ரஷ்யக் கிளர்ச்சிப் படையைச் சேர்ந்த ஒரு முக்கிய தளபதியைக் கொல்ல ரஷ்யா திட்டமிட்ட நிலையில், அந்த மரணத்தைப் போலியாகச் சித்தரித்து ஏமாற்றியுள்ளது உக்ரைன்! அத்தோடு மட்டுமின்றி அவரது தலைக்கு அறிவிக்கப்பட்டிருந்த பணத்தையும் ரஷ்யாவிடம் ஏமாற்றி வாங்கியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வரப் பல்வேறு தரப்பினரும் முயன்றாலும் கூட மோதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ரஷ்ய படை தனது பிடியை இறுக்கி வருகிறது. இந்தச் சூழலில் புதின் கண்களில் மண்ணை தூவும் வகையில் ஒரு அட்டகாசமான ஆபரேஷனை உக்ரைன் நடத்திக் காட்டியுள்ளது.

ஏமாற்றிய உக்ரைன்
ரஷ்யக் கிளர்ச்சிப் படையில் உள்ள முக்கியமான ஒரு தளபதியின் மரணத்தைப் போலியாக உக்ரைனின் ராணுவப் புலனாய்வு சேவை சித்தரித்துள்ளது. இது மட்டுமின்றி அவரது மரணத்திற்கு ரஷ்யா ஐந்து லட்சம் டாலர் (சுமார் ரூ.4 கோடி) பரிசை அறிவித்திருந்த நிலையில், அதையும் பெற்றிருக்கிறது.. ரஷ்யாவைக் காலி செய்த உக்ரைனின் இந்த சீக்ரெட் ஆபரேஷன் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.
ஒயிட் ரெக்ஸ் (White Rex) என்று அழைக்கப்படும் ரஷ்யக் கிளர்ச்சிப் படைத் தலைவரை கொல்ல ரஷ்யா திட்டமிட்டு வந்தது. அவரை கொன்றால் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒயிட் ரெக்ஸை கொன்றுவிட்டதாகவும் உக்ரைன் அறிவித்திருந்தது. ரஷ்யா இதைக் கொண்டாட ஆரம்பித்த நிலையில், அப்போது தான் உக்ரைன் தனது சீக்ரெட் ஆபரேஷன் குறித்த தகவலைப் பகிர்ந்து ரஷ்யா முகத்தில் கரியைப் பூசியது.
என்ன நடந்தது
ஒயிட் ரெக்ஸ்ஸை கொல்ல ரஷ்யா முயன்று வருவதும் அதற்குச் சதி நடப்பதையும் உக்ரைன் தெரிந்து கொண்டது. அவரது உயிரைக் காக்கவும், படுகொலைக்கு உத்தரவிட்டவர்கள் மற்றும் அதைச் செய்யத் திட்டமிட்டவர்களை அடையாளம் காணவும் ஒரு சீக்ரெட் ஆபரேஷனை உக்ரைன் உருவாக்கியது. சுமார் ஒரு மாதக் காலம் இந்த சீக்ரெட் ஆபரேஷனை உக்ரைன் நடத்தியது. இதன் மூலம் ஒயிட் ரெக்ஸ் உயிரைக் காப்பாற்றியது மட்டுமின்றி, அதற்கான சன்மானத்தையும் வாங்கியுள்ளது உக்ரைன்.
ரஷ்யாவுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த இந்த ஒயிட் ரெக்ஸை குறிவைத்து சனிக்கிழமை டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் அவர் கொல்லப்பட்டதாகவும் ரஷ்யா அறிவித்திருந்தது. ஆனால், அவர் கொல்லப்படவில்லை ரஷ்ய உளவுத்துறை ஏமாற்றப்பட்டதாக ஒயிட் ரெஸ்க்கின் கிளர்ச்சிப் படையே பின்னர் அறிவித்தது. இது குறித்து அந்தக் கிளர்ச்சிப் படை மேலும், "ரஷ்ய ஸ்பெஷல் சர்வீஸின் மாபெரும் தோல்வி இது... எங்கள் தளபதி டெனிஸ் கப்புஸ்டின் உயிருடன் இருக்கிறார். அவரது மரணத்திற்காகப் பெறப்பட்ட ஐந்து லட்சம் டாலர்கள், உக்ரைனின் பாதுகாப்புப் புலனாய்வு சிறப்புப் படைகளை வலுப்படுத்தும்" என்று கூறப்பட்டுள்ளது.
வீடியோ
மேலும், அத்தோடு இன்னொரு வீடியோவையும் இணைத்துள்ளனர். அதில் ஒயிட் ரெக்ஸ்ஸை உக்ரைன் சீக்ரெட் சர்வீஸ் தலைவர் கிரிலோ புடானோவ் சந்தித்து வரவேற்கிறார். மேலும், "மீண்டும் உயிருடன் திரும்பியதற்கு வாழ்த்துகள்" என அவர் சொல்வதும் தெளிவாகத் தெரிகிறது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அதேநேரம் உக்ரைன் படைகள் இப்படி ஒரு மரணத்தைப் போலியாகச் சித்தரிப்பது இது முதல் முறையல்ல. 2018இல், பிரபல உக்ரைன் செய்தியாளர் அர்காடி பாப்சென்கோ சுட்டுக் கொல்லப்பட்டதாக முதலில் செய்திகள் வெளியாகின. இருப்பினும், மறுநாள் தான் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரிய வந்தது. அதாவது அர்காடி உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்து உக்ரைன் சீக்ரெட் சர்வீஸே அந்தப் போலி தகவலைப் பரப்பியது அlன் பின்னரே தெரிய வந்தது.
ஒயிட் ரெக்ஸ்
இந்த ஒயிட் ரெக்ஸ் இருக்கும் ரஷ்ய தன்னார்வப் படைக் குழு என்பது உக்ரைன் ஆயுதப் படைகளுடன் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராகப் போரிடம் ஒரு பிரிவாகும். 2022இல் நிறுவப்பட்ட இக்குழு, வலதுசாரி ரஷ்ய புலம்பெயர்ந்தோரால் உருவாக்கப்பட்டது. புதினின் அரசைக் கவிழ்த்து, உக்ரைன் உண்மையான எல்லைகளை மீட்டெடுப்பதே இவர்களின் முதன்மை நோக்கம்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications