ப்பா.. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டிற்கு ஒரே மாதத்தில் இவ்வளவு செலவா? அதிர்ச்சி தகவல்!
கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை ஒரு மாதத்துக்கும் அதிகமாக தொடர்கிறது. இந்நிலையில் தான் ரஷ்யாவை சமாளிக்க ஒரு மாதத்தில் மட்டும் ரூ.75 ஆயிரத்து 995 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன், ரஷ்யா இடையே கடந்த சில மாதங்களாக பதற்றம் நிலவி வந்தது. ரஷ்யா தரப்பில் உக்ரைன் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டன.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் எச்சரித்தன. உக்ரைன் மீதான போருக்கான முன்னோட்டம் என அந்த மேற்கத்திய நாடுகள் கூறின.

பிப்ரவரி 24ல் போர்
இந்த கூற்றை ரஷ்யா முற்றிலுமாக மறுத்தது. படைகள் பயிற்சிக்காக மட்டுமே குவிக்கப்பட்டுள்ளன. போர் தொடுக்கும் எண்ணம் இல்லை என தொடர்ந்து கூறி வந்தது. இந்நிலையில் திடீரென்று பிப்ரவரி மாதம் 24ம் தேதி ரஷ்யா அதிபர் விலாடிமிர் புதின் உத்தரவில் அந்நாட்டு படைகள் உக்ரைனுக்குள் நுழைந்தன.

தாக்குதல்
இதை உக்ரைன், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் போர் என கூற, ரஷ்யா மட்டும் ராணுவ நடவடிக்கை என கூறியது. மேலும், உக்ரைனில் பொதுமக்களுக்கு எதிரான ஆட்சி நடக்கிறது. இதை சரிசெய்யவே ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ரஷ்யா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. போர் துவங்கிய பிப்ரவரி 24 முதல் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களில் ரஷ்யா வான்வெளி தாக்குதலை நடத்த துவங்கியது. குண்டுகள் வீசப்பட்டன. ஏவுகணை தாக்குதல்களும் நடத்தப்பட்டன.

பலிகள் அதிகரிப்பு
இதனால் பல்வேறு நகரங்களில் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. அப்பாவி மக்கள், உக்ரைன் ராணுவத்தினர் ஏராளமானவர்கள் பலியாகி உள்ளனர். இதேபோல் உக்ரைன் நடத்திய தாக்குதலிலும் ரஷ்யா வீரர்கள் வீரர்கள், படை தளபதிகள் இறந்துள்ளனர். இருதரப்புக்கும் இடையே பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. இதனால் போர் தொடர்ந்து வருகிறது. இருதரப்பிலும் பலிகள் அதிகரித்து வருகின்றன.

செலவு எவ்வளவு
இந்நிலையில் உக்ரைன் அதிபரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரஷ்யாவை எதிர்கொள்ள செலவழிக்கப்பட்ட தொகை குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரஷ்யாவுடனான போரை சமாளிக்க உக்ரைனுக்கு ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகி உள்ளது. இது உக்ரைன் நாட்டின் சொந்த வரி வருவாய் மற்றும் சர்வதேச நாடுகளின் உதவி ஆகியவற்றின் மூலம் ஈடுசெய்யப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது. 10 பில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய மதிப்பில் ரூ.75 ஆயிரத்து 995 கோடியே 50 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications