அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங்
டெஹ்ரான்: ஈரானின் புதிய உச்ச தலைவர் (Supreme Leader) அரியணை ஏறிய கையோடு ஆற்றியிருக்கும் முதல் உரை, உலக நாடுகளின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. "விபரீதம் இவ்வளவு சீக்கிரம் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை" என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் முணுமுணுக்கும் அளவுக்கு, அவரது பேச்சில் அனல் தெறிக்கிறது. இதில் அவர் சொன்ன.. ஒரு முக்கிய எச்சரிக்கைதான் உலக நாடுகளை அதிர வைத்து உள்ளது.
தன் தந்தையை விடவும் தீவிரமான 'ஹார்ட்லைனர்' (Hardliner) என்பதை முதல் பந்திலேயே நிரூபித்திருக்கிறார் இந்தப் புதிய தலைவர். அமைதிப் பேச்சுவார்த்தை, தூதரக உறவு என்பதற்கெல்லாம் இடமே தராமல், நேரடியான போர்ப் பிரகடனத்தையே அவர் வாசித்திருக்கிறார்.

"வெளியேறு அல்லது அழி" - அமெரிக்காவுக்குக் கெடு!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருக்கும் அனைத்து அமெரிக்க ராணுவ தளங்களையும் உடனடியாக மூட வேண்டும் என்பதுதான் அவரது முதல் கட்டளை. "இல்லையெனில் அந்தத் தளங்கள் தரைமட்டமாக்கப்படும்" என நேரடியாகவே மிரட்டல் விடுத்திருக்கிறார். இது வெறும் வாய்வார்த்தை அல்ல, ஒரு நீண்ட காலப் போருக்கு ஈரான் தயாராகிவிட்டதையே இது காட்டுகிறது.
சொத்துகளுக்குக் குறி: ஈரானின் 'நஷ்ட ஈடு' பாணி
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை 'எதிரி' என விளித்துள்ள அவர், ஈரானுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு ஈடாக சொத்துகளைக் கைப்பற்றுவோம் என்கிறார். "அவர்கள் தர மறுத்தால், அவர்களின் சொத்துகளை நாங்கள் பறிமுதல் செய்வோம். அது முடியாவிட்டால், அதற்கு இணையான மதிப்புள்ள அவர்களின் சொத்துகளை அழிப்போம்" என அவர் பேசியிருப்பது சர்வதேசப் பொருளாதாரச் சந்தையில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்: உலகிற்கு ஆபத்து?
உலகின் மிக முக்கியமான எண்ணெய் வழித்தடமான 'ஹார்முஸ் ஜலசந்தி' (Strait of Hormuz) தொடர்ந்து மூடப்பட்டிருக்க வேண்டும் என அவர் பிடிவாதம் பிடிக்கிறார். இது உலக நாடுகளின் எரிசக்தி தேவையை முடக்கும் ஒரு தற்கொலை முயற்சி எனத் தெரிந்தும், அவர் இதில் உறுதியாக இருக்கிறார். மேலும், "எங்களுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் யார் என்பதை அண்டை நாடுகள் தெளிவுபடுத்த வேண்டும்" என வளைகுடா நாடுகளுக்கும் ஒரு 'செக்' வைத்திருக்கிறார்.
"எதிரிக்கு அனுபவம் இல்லாத, அவர்கள் பலவீனமாக இருக்கும் புதிய முனைகளில் (Fronts) தாக்குதல் நடத்த ஆலோசனைகள் நடக்கின்றன. இதில் அவர்களுக்கு அனுபவம் இல்லாத ஆயுதத்தை பயன்படுத்துவோம். போர் நீடித்தால் இந்தப் புதிய முனைகள் திறக்கப்படும்!"
புதிய வியூகம்: முன்னறியாத தாக்குதல்கள்
மேற்கூறிய அவரது உரைதான் மிக முக்கியமானது. இதுவரை அமெரிக்கா சந்திக்காத புதிய களங்களில் போரைத் தொடங்க ஈரான் திட்டமிட்டு வருவதை இது உறுதிப்படுத்துகிறது. சைபர் தாக்குதல்கள் முதல் ஆளில்லா ஏவுகணைகள் வரை எதை வேண்டுமானாலும் ஈரான் கையில் எடுக்கலாம்.
சுருக்கமாகச் சொன்னால், இந்தப் புதிய தலைவர் அமைதியை விரும்பவில்லை; மாறாக ஒரு நீண்ட கால மோதலுக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டு ஆடுகளத்திற்கு வந்திருக்கிறார். தந்தையை விடவும் பிடிவாதமான, ஆக்ரோஷமான ஒரு தலைவரின் கீழ் ஈரான் நுழையும்போது, மத்திய கிழக்கில் ஒரு பெரிய போர் மேகம் சூழ்ந்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது.
விஷயங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி மிக வேகமாக நகரப் போகின்றன!
-
கோதாவில் இறங்கும் இங்கிலாந்து.. 35 நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு? எகிறும் டென்ஷன் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
நிலவில் மீண்டும் கால் வைக்கும் மனிதர்கள்.. 53 ஆண்டுக்கு பிறகு மற்றொரு சரித்திரம் படைக்கும் அமெரிக்கா -
நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே -
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு! -
“இந்தப் போரால் ஒரே ஒரு நல்லது நடக்கும்”.. ஈரான் - இஸ்ரேல் போர் பற்றி வைரமுத்து கவிதை!












Click it and Unblock the Notifications