Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு அதிகாரிபோல் போலி கையெழுத்து - கரூர் அருகே அதிமுக நகர செயலாளரை கைது செய்த காவல்துறை

Subscribe to Oneindia Tamil

கரூர்: போலியாக ஆவணம் தயாரித்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி மோசடி செய்த புகாரின்பேரில் புஞ்சை புகலூர் பேரூராட்சி அதிமுக நகர செயலாளரை காவல்துறை கைது செய்தது.

Recommended Video

    அரசு அதிகாரிபோல் போலி கையெழுத்து - கரூர் அருகே அதிமுக நகர செயலாளரை கைது செய்த காவல்துறை

    நங்கவரம் பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் கருப்பையா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் புஞ்சை புகலூர் பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார்.

    அங்கு கட்டிடங்களுக்கு உரிமம் வழங்குதல், சொத்து வரி நிர்ணயம் செய்தல், ஆய்வு செய்தல், மனைப்பிரிவு அங்கீகாரம் வழங்க செயல் அலுவலருக்கு பரிந்துரை செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தார்.

    அதிமுக நகர செயலாளர் மிரட்டல்

    அதிமுக நகர செயலாளர் மிரட்டல்

    இந்த நிலையில், புகலூர் அதிமுக நகர செயலாளராக உள்ள விவேகானந்தன் என்பவர் சுப்பு கார்டன் என்ற பெயரில் மனைகளுக்கு தடையில்லா சான்று கோரி கருப்பையாவை மிரட்டியதாக கூறப்படுகிறது. அங்கீகாரம் பெறப்படாத அந்த மனைகளுக்கு தடையின்மை சான்று வழங்க கருப்பையா மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அவர் நங்கவரம் பேரூராட்சிக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.

     போலி கையெழுத்திட்டு மோசடி

    போலி கையெழுத்திட்டு மோசடி

    இந்த நிலையில், அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்ட பிறகு போலியாக கையெழுத்து போட்டு சுப்பு கார்டன் மனைகளுக்கு விவேகானந்தன் தடையில்லா சான்றிதழ் பெற்றதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிமுக நகர செயலாளர் விவேகானந்தன், அவரது மனைவி லலிதா, மாமியார் சரோஜா, ஜாகிர் உசேன், கண்ணன் ஆகிய ஐந்து நபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளனர்.

    கருப்பையா அளித்த புகார்

    கருப்பையா அளித்த புகார்

    இந்த நிலையில் திண்டுக்கல் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனருக்கு புகார் கடிதம் எழுதிய கருப்பையா, இந்த மோசடியான பத்திரப்பதிவு காரணமாக பேரூராட்சிக்கு ரூபாய் 15 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். அத்துடன், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தடையில்லா சான்று வழங்கப்படாத சுப்பு கார்டன் இடம் தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் கருப்பையா புகார் தெரிவித்துள்ளார்.

     கருப்பையாவிடம் போலீஸ் விசாரணை

    கருப்பையாவிடம் போலீஸ் விசாரணை

    இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கருப்பையாவிடம் விசாரணை நடத்தினர். அதில், விவேகானந்தன் போலியாக கையெழுத்திட்டு தடையில்லா சான்று பெற்றது தெரியவந்தது. இதனை அடுத்து அதிமுக நகர செயலாளர் விவேகானந்தன் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அப்போது விவேகானந்தன் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது.

     சிறையில் அடைக்கப்பட்ட அதிமுக நகர செயலாளர்

    சிறையில் அடைக்கப்பட்ட அதிமுக நகர செயலாளர்

    இந்நிலையில் நேற்றிரவு கரூரில் இருந்த அவரை பசுபதிபாளையம் போலீசார் கைது செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கரூர் கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+