75 ஆயிரம் பேருக்கு வேலை நியமன ஆணை வழங்கிய மோடி.. கொரோனாவால் பொருளாதாரத்தில் தாக்கம் என பேச்சு
லக்னோ: நாட்டில் 75 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி, 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட ஒரு பெருந்தொற்றின் காரணமாக (covid) ஏற்பட்ட விளைவுகளை 100 நாட்களில் தீர்த்து விட முடியாது என்று பேசினார்.
மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் பொத்துறை நிறுவனங்களில் அடுத்த 18 மாதங்களுக்குள் 10 லட்சம் வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டு இருந்தார்.
அதன் முதல் கட்டமாக இன்று 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார்.

வாரணாசியில் இருந்தபடி பிரதமர் மோடி
பாதுகாப்பு அமைச்சகம், ரயில்வே துறை, தபால் துறை, உள்துறை அமைச்சகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், மத்திய தொழில்பாதுகாப்பு படை, சிபிஐ, சுங்கத்துறை, வங்கி என மத்திய அரசின் பல துறைகளில் இளைஞர்களுக்கான பணி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ரோஜ்கர் மேளா என்ற பெயரில் காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. வாரணாசியில் இருந்தபடி இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

சென்னையில் நிர்மலா சீதாராமன்
சென்னை ஐ.சி.எப்.பில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு 250 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒடிசாவில் இருந்தும், சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா குஜராத்தில் இருந்தும், தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் சண்டிகரில் இருந்தும், வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்தும் பங்கேற்றனர்.

100 நாட்களில் தீர்த்துவிட முடியாது
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:- 75 ஆயிரம் பேருக்கு இன்று பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச சூழல் சரியாக இல்லை என்பதுதான் உண்மை. பல மிகப்பெரிய பொருளாதார நாடுகள் கூட திணறி வருகின்றன. பல நாடுகளில் பண வீக்கம் மற்றும் வேலை வாய்ப்பு இன்மை பிரச்சினை உச்சத்தில் உள்ளது. 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு பெருந்தொற்றின் காரணமாக (covid) ஏற்பட்ட விளைவுகளை 100 நாட்களில் தீர்த்து விட முடியாது.

மக்களின் ஆசிர்வாதத்தால்..
உலகம் முழுவதும் இந்த பிரச்சினையும் அதன் தாக்கத்தையும் எதிர்கொள்ள நேரிட்டாலும் இந்தியா புதிய முயற்சிகளையும் சில துணிச்சலான முடிவுகளையும் எடுத்து வருகிறது. இந்த பிரச்சினைகளால் இந்தியா பாதிக்கப்படாமல் இருக்க இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச நாடுகள் எதிர்கொள்ளும் இந்த பிரச்சினைகள் இந்தியாவை அதிகம் பாதிக்காத வகையில் நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது ஒரு சவாலான பணிதான். ஆனால், உங்களுடைய ஆசிர்வாதத்தால் இதுவரை பாதுகாத்துக்கொண்டிருக்கிறோம்'' என்றார்.

ஜே பி நட்டா பேச்சு
இந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கூறியதாவது:- 2047- ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டம் பிரதமர் மோடிக்கு உள்ளது. இறக்குமதி செய்யும் நாடாக இருந்த இந்தியா இன்று பாதுகாப்பு தளவடாங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியிருக்கிறது. டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியாவின் பங்களிப்பு மட்டும் 40 சதவிகிதமாக உள்ளது. பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையின் மூலம் நமக்கு கிடைத்த விளைவுகள் தான் இவை. இவ்வாறு அவர் பேசினார்.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications