திருமங்கலம் தொகுதி.. இறங்கி வேலை செய்யும் திமுக நிர்வாகி மணிமாறன்.. அலர்ட் மோடில் ஆர்பி உதயகுமார்!
மதுரை: சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், மதுரைக்கும் திமுக ஸ்பெஷல் கவனம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மதுரை கிழக்கு தொகுதியில் செல்லூர் ராஜுவை வீழ்த்த திமுக தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதேபோல் மதுரை அதிமுகவின் மற்றொரு முகமாக உள்ள ஆர்பி உதயகுமாரை தோற்கடிக்க வேண்டும் என்று திமுக தலைமை ஆர்வம் காட்டி வருகிறது.
திருமங்கலம் தொகுதியை பொறுத்தவரை ஆர்பி உதயகுமார் ஹாட்ரிக் வெற்றியை பெறுவதற்கு தயாராகி வருகிறார். கடந்த தேர்தலில் சுமார் 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் மணிமாறன் ஆர்பி உதயகுமாரிடம் தோல்வி அடைந்தார். அதற்கு அமமுக வேட்பாளர் ஆதிநாராயணன் வாங்கிய 13,780 வாக்குகளும் ஒரு காரணமாக அமைந்தது.

அதேபோல் திருமங்கலம் தொகுதியில் முக்குலத்தோர் வாக்குகளே பெரும்பான்மையாக உள்ளன. கிராமப்புற பகுதி என்பதால், உள்ளூர் நிர்வாகிகளின் தயவு இல்லாமல் வெல்வது கடினம். அதிமுகவுக்கு பூத் லெவலில் வலிமையாக இருக்கும் தொகுதி திருமங்கலம். இம்முறையும் திருமங்கலம் தொகுதி மணிமாறனுக்கே அளிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.
ஏனென்றால் அண்மையில் மதுரையில் நடந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அருகிலேயே மணிமாறனுக்கும் இடம் அளிக்கப்பட்டிருந்தது. அதேபோல் சீட் உறுதி என்று தெரிந்த பின், மணிமாறன் நேரடியாக களத்தில் இறங்கி செயல்பட தொடங்கி இருக்கிறார். அமமுக நிர்வாகிகள் பலரையும் திமுக ஏற்கனவே இழுக்க தொடங்கிவிட்டது.
ஆனால் தவெக புதிதாக களத்தில் இருப்பதால், எவ்வளவு வாக்குகள் பிரியும் என்பது தெரியாமல் இருக்கிறது. ஆர்பி உதயகுமாரும் கட்சியில் பெரிய பொறுப்பில் இருப்பதால், அதனை தக்க வைத்துக் கொள்ள தேர்தல் வெற்றி அவசியம் என்பதை உணர்ந்து கட்சியினரை தொடர்ந்து அனுசரித்து வேலை வாங்கி வருகிறார். 2 முறை தொடர்ந்து வென்றுள்ளதால், ஆர்பி உதயகுமார் மீது ஒரு அதிருப்தி இருந்து வருகிறது.
அதனை மணிமாறன் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள தீவிரமாக இருக்கிறார். ஏற்கனவே திமுகவினருக்கு பரிசுப் பொருட்கள், கறி விருந்து என்று அமைச்சர் மூர்த்தியின் கீழ் மதுரை நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர். அமைச்சர் மூர்த்தியின் ஆதரவுடன் மணிமாறன் செயல்பட்டு வருவதால், இம்முறை ஆர்பி உதயகுமார் மிகப்பெரிய சவாலை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications