Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்! எடப்பாடி பழனிசாமியை அழைத்து வர ஆர்.பி.உதயகுமார் ஆர்வம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பங்கேற்க வைக்க ஆர்வம் காட்டுகிறார் ஆர்.பி.உதயகுமார்.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராகிய பிறகு எடப்பாடி பழனிசாமி பங்கேற்க போகும் முதல் பொதுக்கூட்டம் என்பதால், அதனை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு வருகிறார் ஆர்.பி.உதயகுமார்.

இதனிடையே மதுரை, திருச்சி, விழுப்புரம் என மூன்று ஊர்களை எடப்பாடி பழனிசாமி பரிசீலித்து வருவதாகவும் அதில் எந்த ஊரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க முடிவு செய்கிறார் என்ற விவரம் தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது.

அண்ணா பிறந்தநாள்

அண்ணா பிறந்தநாள்

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரையிலான மூன்று நாட்களுக்கு அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டும் வழக்கம் போல் அந்த பொதுக்கூட்டங்கள் அதிமுக சார்பில் நடத்தப்படவுள்ளன. இதற்கான அறிவிப்புகள் இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோவையில் நடத்த திட்டமிட்டுள்ளது.

மதுரையில் பொதுக்கூட்டம்

மதுரையில் பொதுக்கூட்டம்

தமிழகம் முழுவதும் இருந்து ஆதரவாளர்களை திரட்டி மாஸ் காட்ட ஆயத்தமாகிவிட்டார் ஓபிஎஸ். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி எந்த ஊரில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமார் எடப்பாடி பழனிசாமியை மதுரைக்கு அழைத்து வந்து அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை நடத்த ஆர்வம் காட்டுகிறார்.

 எந்த ஊரில்?

எந்த ஊரில்?

அந்தப் பொதுக்கூட்டத்துக்கு பெருமளவில் ஆட்களை திரட்டுவதன் மூலம் தென் மாவட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்குக்கு பஞ்சமில்லை என்ற பிம்பத்தை உருவாக்க அவரது தரப்பு ஆலோசித்து வருகிறதாம். இதனிடையே மதுரை, திருச்சி, விழுப்புரம் என மூன்று ஊர்களை எடப்பாடி பழனிசாமி பரிசீலித்து வருவதாகவும் அதில் எந்த ஊரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க முடிவு செய்யப் போகிறார் எனவும் தெரியவில்லை எனக் கூறுகிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.

Recommended Video

    ADMK R.B.Udhayakumar | கொட்டும் மழையில் பேசிய ஆர்.பி.உதயகுமார்
    பலத்தை உணர்த்த

    பலத்தை உணர்த்த

    ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும், அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மூலம் தங்களது பலத்தை டெல்லிக்கு காட்ட ஆயத்தமாகி விட்டார்கள் என்பது மட்டும் புரிகிறது. இதற்கு மத்தியில் சசிகலாவும் தனது பங்குக்கு அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை தஞ்சையில் நடத்த ஆலோசித்து வருகிறாராம்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+