தெற்கே இருந்தவர் திராவிடர்; வடக்கே இருந்தவர் ஆரியர்.. ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு பேச்சு!
மதுரை: அண்மையில் திராவிடர்கள் யார் என்பது குறித்து முரசொலியும், திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பாடம் எடுத்திருந்த நிலையில், ஆங்கிலேயர்கள் தெற்கே இருந்தவர் திராவிடர் என்றும், வடக்கே இருந்தவர் ஆரியர் என்றும் பிரித்ததாக தமிழக ஆளுநர் பேசியுள்ளார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 54-வது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை பங்கேற்றார். முன்னதாக ஆளுநர் ஆர்.என். ரவியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை காமராஜர் பல்கலைக் கழக வெளிப்புறத்தில் கறுப்புக்கொடியுடன் தமமுக மற்றும் சம நீதி அமைப்பு சார்பாக சுமார் 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள். உங்களுக்கும் குடும்பத்துக்கும் மகிழ்ச்சியான நாளாக அமைகிறது. நீங்கள் பெற்ற இந்த பட்டம் கடுமையான உறுதியால் கிடைக்க பெற்றுள்ளது. எதிர்காலம் சிறப்பாக அமைய மனமார வாழ்த்துகள்.

பன்முகத்துவத்தை சிதைக்க முயற்சி
வட அமெரிக்காவை சிதைத்து போல இந்தியாவை சிதைக்க ஆங்கிலேய காலனி ஆதிக்கம் திட்டமிட்டபோது அவர்களால் அதை சாதிக்க முடியவில்லை. ஏனெனில் இந்தியா சீனாவை விட சமூக, பொருளாதார அளவில் மேம்பட்டு இருந்தது. இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்க ஆங்கிலேயர்கள் முயற்சி செய்தார்கள்.

புதிய விளக்கம்
தெற்கே இருந்தவர் திராவிடர் என்றும், வடக்கே இருந்தவர் ஆரியர் என்றும் பிரித்தனர். ஆங்கிலேயர்கள் எவ்வாறு இந்திய வரலாற்றை மாற்றினார்கள் என்பதை அனைவரும் தேடி தெரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் தான் கப்பல்களை வாட்டர்ப்ரூஃப் (waterproof) செய்வது குறித்து ஆங்கிலேயர்கள் கண்டுகொண்டனர். சோழர்களின் கப்பல் பயன்பாட்டு முறை வழியாகவே, ஆங்கிலேயர்கள் கப்பல் கட்டுமானத்தில் முன்னேற்றம் அடைந்தனர்.

காமராஜர் புகழ்
காமராஜர் சிறந்த தேசியவாதி. கிராம பகுதியில் இருந்துவந்து பாரத் ரத்னா பெரும் அளவுக்கு உயர்ந்தவர். எல்லோருக்கும் முன்மாதிரியாக திகழ்பவர். ஜாலியன் வாலபாக் படுகொலை சம்பவத்தை பார்த்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட தொடங்கினார். தமிழக கல்வி கட்டமைப்பை உருவாக்கியவர். தொழிற்சாலைகள் உருவாக்கியவர். சென்னை ஐ ஐ டி யை உருவாக்கியவர். அவரை நினைப்பதில் பெருமை கொள்கிறேன்.

இந்தியா முன்னேற்றம்
தற்போது வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எல்லோரும் சென்ற பாதையில் செல்லாமல், புதிதாக தொழில் தொடங்க முயற்சியுங்கள்.
இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் 100வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. அப்போது புதிய சாதனைகளை படைக்க நாம் உழைக்க வேண்டும். புதிய இந்தியாவை இளைஞர்கள் தான் உருவாக்க வேண்டும். 2014ல் 400 தொழில் முனைவோர் மட்டுமே இருந்தனர். தற்போது 70,000 தொழில் முனைவோரை இந்தியா உருவாக்கி உள்ளது .

மத்திய அரசின் பெருமை
நாடு வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது. இன்று ஆண்களை விட பெண்கள் அதிகமாக பட்டம் பெற்றுள்ளனர். இந்த வளர்ச்சி இந்தியாவை வேகமாக முன்னேற்றும். வரவுள்ள சென்சஸ் அறிக்கைபடி, ஆண் - பெண் விகிதாச்சாரத்தில் மாற்றம் உள்ளது. ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருப்பர். இந்தியாவை ஒரே குடும்பமாக பார்க்க வேண்டும். பல பிரிவுகளாக பார்க்கக் கூடாது. 8 ஆண்டுகளில் பல்வேறு தளங்களிலும், துறைகளிலும் இந்தியா முன்னேறி உள்ளது என்று தெரிவித்தார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications