“என் உயிருக்கு ஆபத்து.. முதல்வரை சந்திக்கணும்”.. உருக்கமாக கோரிக்கை வைத்த மதுரை திமுக நிர்வாகி!
மதுரை: "என் மீது சுமத்தப்பட்டுள்ள பல்வேறு வழக்குகளால் என்னால் வெளியில் நடமாட முடியவில்லை, எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிரது. முதல்வர் ஸ்டாலினை என்னைச் சந்தித்து எனது குறைகளை கூறவேண்டும்" என மதுரை மாநகராட்சி திமுக முன்னாள் மண்டலத் தலைவர் வி.கே.குருசாமி உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.
மதுரை மாநகராட்சியின் முன்னாள் திமுக மண்டலத் தலைவர் வி.கே.குருசாமி. இவருக்கு அதிமுக முன்னாள் மண்டலத் தலைவர் ராஜபாண்டி குடும்பத்தினருடன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வரும் முன்விரோதம் மற்றும் கொலை வழக்கு காரணமாக இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், இவர் மதுரை கிழக்கு ரயில் நிலையம் அருகே உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய வி.கே.குருசாமி, "மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு பேசிக்கொண்டிருந்த போது என்னை குண்டர் வழக்கில் கைது செய்தனர். 2016 ஆம் ஆண்டில் ஓபுலா படித்துறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக வழக்கு போட்டனர். இதுபோன்று பல பொய் வழக்குகளை போலீசார் என்மீது பதிவு செய்துள்ளனர். ஆனால் பெங்களூரில் என்னை வெட்டியவர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது நான் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிரது. எனவே, எனக்கு பாதுகாப்பு வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தேன். அதன்பேரில் போலீசார் எனக்கு பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். ஆனால், எப்போது வேண்டுமென்றாலும் பாதுகாப்பை நீக்குவோம் என காவல்துறையினர் மிரட்டுகின்றனர். எனது உறவினர்கள் 10 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் கூட எனது உறவினர் மகனை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு எனது குடும்பத்தில் நடைபெற்ற காதணி விழாவை நடத்த விடாமல் தடுத்தனர். பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து விழா நடைபெற்றது. அப்போதும் என்னை கைது செய்து, இந்த விழாவில் கிடைத்த பணத்தையெல்லாம் போலீசார் எடுத்துச் சென்றுவிட்டனர்.
2001-ல் மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் திமுகவில் சீட் வழங்காததால், சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றேன். 2011 தேர்தலில் நானும் எனது மகளும் வெற்றி பெற்றோம். என் மீது தவறு இருந்தால் மக்கள் எப்படி என்னை மீண்டும், மீண்டும் தேர்வு செய்வார்கள். இப்போதும் நான் பொதுமக்களுக்காக தொடர்ந்து உழைத்து வருகிறேன்.
தற்போது கூட உங்களுடன் ஸ்டாலின் முகாமில் எங்கள் பகுதி மக்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை வைத்துள்ளேன். இந்த பகுதியில் திமுகவை தோற்கடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், என்னை அழிக்க திட்டமிட்டு, பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் சட்டத்தை மீறி போக மாட்டேன்.
என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. முன்பு, கலைஞர் கருணாநிதி இருக்கும்போது, இது போன்று கட்சியினர் பாதிக்கப்பட்டால், உடனே கூப்பிட்டு கேட்பார். எனவே, நான் எங்கள் தலைவரும், முதல்வருமான ஸ்டாலினை சந்திக்க வேண்டும். அவரிடம் என்னுடைய கோரிக்கைகளை கூற வேண்டும் என கடந்த 2 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறேன். என்னால் முடியவில்லை. எனவே, அவர் என்னை அழைத்து எனது கோரிக்கைகளை கேட்டு எனக்கும் எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.
-
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications