மதுரை விமான நிலையத்தில் என்ன நடந்தது தெரியுமா? மீண்டும் இன்ஸ்டாவில் பதிவு..விளக்கமளித்த சித்தார்த்
மதுரை: மதுரை விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகள் இந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக இன்ஸ்டாவில் நடிகர் சித்தார்த் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், அங்கு நடந்த சம்பவம் இதுதான் என நடிகர் சித்தார்த் இன்று மீண்டும் இன்ஸ்டாவில் போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகள் இந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக நடிகர் சித்தார்த் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் பெரும் விவாதத்தை கிளப்பி விட்டு இருக்கிறது.
சித்தார்த்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில், இது தொடரபாக தனது தர்ப்பு விளக்கத்தை மீண்டும் அளித்து இருக்கிறார் சித்தார்த். சித்தார்த் தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

ஆதார் கார்டை சோதனை செய்தார்
விமான நிலைய சம்பவத்திற்கு பிறகு என்னிடம் பலரும் இது தொடர்பாக பேசி வருகின்றனர். ஊடகங்களும் என்னை தொடர்பு கொண்டன. எனவே எனது தரப்பு கருத்தை மீண்டும் முன் வைக்கிறேன். எனது குடும்பத்தினருடன் நான் மதுரை சென்று இருந்தேன். விமான நிலையத்தில் அந்த சமயத்தில் பெரிதாக கூட்டம் இல்லை. அங்கு இருந்த சி.ஐ.எஸ்.எப் அதிகாரி எங்களிடம் கடுமையாக நடந்து கொண்டனர். சி.ஐ.எஸ்.எப் வீரர் ஒருவர் எனது ஆதார் கார்டை சோதனை செய்தார்.

ஏன் அப்படி கேட்டார்
என் முகத்தில் இருந்து முகக்கவசத்தை இறக்கிய பிறகு மீண்டும் மூன்று முறை சோதனை செய்தார். நான் கேள்வி எழுப்பிய போது இதில் இருப்பது உங்களைப்போல இல்லை என்றார். நான் தற்போது இருப்பது போலத்தான் புகைப்படத்திலும் எனது முகம் இருந்தது. ஆனால் ஏன் அப்படி கேட்டார் என்று தெரியவில்லை. அதோடு விடாமல் எனது ஏர்பேட் மற்றும் செல்போனை சோதனை செய்து அருகில் உள்ள டிரேவில் தூக்கி போட்டார்.

கைப்பையில் இருந்த சில்லறைகளை எடுத்தனர்
நான் இப்படி போடுவதால் எனது எல்க்ட்ரானிக் உபகரணங்கள் பலமுறை தொலைந்து இருப்பதாக கூறினேன். ஆனால், மதுரை விமான நிலையத்தில் இதுதன் விதி என்று என்னிடம் கூறினார். எனது அம்மாவின் கைப்பையில் இருந்த சில்லறைகளை எடுத்தனர். இதற்கு ஏதிர்ப்பு தெரிவித்த போதும் கண்டு கொள்ளவில்லை. எனது சகோதரியின் பையில் இருந்த மருந்து பொருட்களை பார்த்த சி.ஐ.எஸ்.எப் அதிகாரி ஒருவர் எதற்காக இதை எடுத்து செல்கிறீர்கள் என்று கேட்டார்.

அப்போதெல்லாம் இப்படி நடந்தது இல்லை
அதன்பிறகு நான் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் அங்கே வந்த ஒரு அதிகாரி என்னை அடையாளம் கண்டு கொண்டு, நான் உங்கள் ரசிகர் இங்கே நடந்தவைகளுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்றார். பொதுமக்களிடம் இப்படித்தான் நடந்து கொள்வீர்களா.. பெரியவர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்... என்று அவரிடம் சொன்னேன். நான் அடிக்கடி விமான நிலையத்தில் பயணம் செய்துள்ளேன். அப்போதெல்லாம் இப்படி நடந்தது இல்லை.

இதை தான் எதிர்பார்த்தேன்
சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் நடந்து கொண்ட விதம் என்னை அச்சுறுத்தியது. விமான நிலையத்தை பாதுகாக்கும் பணி கடினமானது அதை யாரும் மறுக்கவில்லை. இத்தகைய சம்பவங்கள் அமைப்புகள் சிதைந்துவிட்டதால் நடப்பது இல்லை. தனிநபரின் மோசமான நாளாக இருந்து அதை மற்றவர் மீது காட்டுவதாகக் கூட இருக்கலாம். வயதானவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றுதான் நான் எதிர்பார்த்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications