900 கி.மீ.. 18 நாள்கள் தொடர்ந்து நடந்து வந்த ரசிகர்.. வியந்துபோன அக்ஷய் குமார் கொடுத்த மதிப்பு
மும்பை: நடிகர் அக்ஷய் குமாரை பார்க்க குஜராத்தை சேர்ந்த ரசிகர் ஒருவர் 900 கிலோ மீட்டர் தூரம் நடந்து மும்பை வந்துள்ளார் சுமார் 18 நாள்கள் தொடர்ந்து நடந்து வந்து அக்ஷய் குமாரை சந்தித்துள்ளார்.
பாலிவுட் டாப் நட்சத்திர நடிகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். இவர் தமிழில் ரஜினிக்கு வில்லனாக 2.0 திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தியில் ஏர்லிப்ட், கப்பார் இஸ் பேக், ஸ்பெஷல் 26, சிங் இஸ் கிங், நமஸ்தே லண்டன், ஹவுஸ்ஃபுல், ரவுடி ராத்தோர், ஒஎம்ஜி, பேட்-மேன், ஹீரா பேரி, காலிடே உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சுமார் 30 ஆண்டுகளாக பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அக்ஷய் குமாருக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் அக்ஷய் குமாரின் ரசிகர் ஒருவர் பார்பட் என்பவர், குஜராத் மாநிலத்தின் ட்வார்கா நகரிலிருந்து மும்பைக்கு 900 கி.மீ நடந்து சென்று உள்ளார். சுமார் 18 நாள்கள் நடந்து சென்ற பார்பட், அக்ஷய் குமாரின் வீட்டை தேடி கண்டுபிடித்து சென்றுவிட்டார்.
இதுகுறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த அக்ஷய் குமார் அவரை அழைத்து பேசியதுடன் இப்படியெல்லாம் செய்யக்கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளார்.
View this post on InstagramA post shared by Akshay Kumar (@akshaykumar) on
இது தொடர்பாக அந்த ரசிகரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அக்ஷய் குமார், பார்பட் என்பவரை இன்று நான் சந்தித்தேன். அவர், 900 கி.மீ நடந்து வந்து 18 நாள்களில் மும்பையை அடைந்துள்ளார். நமது இளைஞர்கள் லட்சியங்களை அடைய இதுபோன்ற திட்டங்களுடன் செயல்பட்டால் யாரும் தடுக்க முடியாது" என்று கூறியுள்ளார்.
அக்ஷய் குமார், தனது இன்னொரு பதிவில், உங்கள் அனைவரையும் சந்திப்பது எனக்கு சந்தோஷமான விஷயம் தான். நீங்கள் என் மீது காட்டும் அன்புக்கு நான் என்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன். ஆனால் இப்படிப்பட்ட விஷயங்களை தயவு செய்து செய்ய வேண்டாம் என்பதை நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்... உங்கள் நேரத்தையும் சக்தியையும் உங்களின் வாழ்க்கையை முன்னேற்ற பயன்படுத்துங்கள். அதுதான் எனக்கு மகிழ்ச்சியை தரும். பார்பட்டுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications