திமுக கெடு வைத்தால்.. அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்காது: சுப.வீரபாண்டியன் எச்சரிக்கை
நாகப்பட்டினம் : பெட்ரோல் டீசல் விலையை 72 மணி நேரத்திற்குள் குறைக்க வேண்டும் இல்லை என்றால் கோட்டை முற்றுகை இடப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கெடு விதித்திருந்த நிலையில், திமுகவினர் கெடு வைத்தால் அண்ணாமலை மேடையில் பேச ஆள் இருக்க மாட்டார்கள் என சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சாமான்ய மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவந்த நிலையில் கடந்த 40 நாட்களாக விலையில் எந்தவித மாற்றமுமின்றி இருந்தது. இந்நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.8ம், டீசல் மீதான கலால் வரி ரூ.6ம் குறைக்கப்பட்டுள்ளது

மக்கள் கோரிக்கை
அதே நேரத்தில் தமிழக அரசும் வாட் வரியை குறைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. கேரளா , ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது போல் தமிழத்திலும் திமுக அரசு வாட் வரியையும் பெட்ரோல் வரியையும் குறைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் இதனை செய்ய முடியாது என நிதியமைச்சர் உறுதியாகக் கூறியுள்ள நிலையில் 72 மணி நேரத்திற்குள் கொடுத்த வாக்குறுதி படி பெட்ரோல், டீசல் விலையை 5 ரூபாய் குறைக்க வேண்டும் எனவும், இல்லையேல் கோட்டையை முற்றுகையிட்டு பாஜக போராட்டத்தில் ஈடுபடும் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கெடு விதித்துள்ளார்.

அண்ணாமலை கெடு
கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " திமுக அரசு செயல் தன்மை இல்லாத அரசு. தேர்தல் அறிக்கையில் கூறியதை செய்யாமல் உள்ளது. அரசியல் லாபத்திற்காக திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று கூறி உள்ளது. 72 மணி நேரத்திற்குள் கொடுத்த வாக்குறுதி படி பெட்ரோல், டீசல் விலையை 5 ரூபாய் குறைக்க வேண்டும்." வலியுறுத்தி இருந்தார்.

கடும் கண்டனம்
அண்ணாமலையின் இந்தப் பேச்சுக்கு திமுகவினர், அமைச்சர்கள் மூத்த நிர்வாகிகள் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். விலையை கூட்டிய மத்திய அரசுதான் விலையை குறைக்க வேண்டும் எனவும் தமிழக அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட விலை ஏற்றம் செய்யவில்லை என திமுக அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். மேலும் களநிலவரங்களை அறிந்து அண்ணாமலை பேச வேண்டும் என தமிழக மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று பதிலடி கொடுத்தார். இந்நிலையில் திமுகவினர் கெடு விதித்தால், அண்ணாமலை பேசும் கூட்டத்தில் கேட்பதற்கு ஆள் இருக்காது என சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்.

சுப.வீரபாண்டியன் பேச்சு
நாகை மாவட்டத்தில் நடைபெற்ற திமுக ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்," பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தபிழக அரசுக்கு கெடு விதித்து இருக்கிறார், கெடு விதிப்பதெற்கெல்லாம் அவருக்கு உரிமையில்லை , கெடு விதிக்கும் அண்ணாமலைக்கே திமுகவினர் கெடு விதித்தாலோ, அவருக்கு எதிராக கிளர்ந்தெழுந்தாலோ அண்ணாமலை 72 மணி நேரத்தில் மேடையில் பேசுவதற்கு ஆள் இருக்கமாட்டார்கள் ஆனால் அந்த அளவுக்கு ஸ்டாலின் கீழிறங்கமாட்டார். " என்று கூறினார்.
-
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி!












Click it and Unblock the Notifications