ஒயின் பாட்டிலை எலி கடிச்சி குடிச்சிருக்குப்பா..எப்படி தெரியுமாப்பா-கிறுகிறுக்கும் டாஸ்மாக் ஊழியர்கள்
எலிகள் ஒயின் குடிக்குமா? என்று பலரும் கேட்கலாம். இதென்ன பிரமாதம் எங்க ஊர் எலி 1000 லிட்டர் சாராயமே குடிச்சிருக்கே என்று சொல்வார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்டாக் கடையில் ஒயின் பாட்டில்களை நாசப்படுத்தி சுவைத்து குடி
நீலகிரி: மனிதர்கள் ரெட் ஒயின் அளவாக குடித்தால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். இதயம் பலப்படும் என்றெல்லாம் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். இந்த விசயம் எப்படி எலிகளுக்கு தெரியுமோ லாக்டவுன் காலத்தில் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடையில் இருந்த ஒயின் பாட்டில்களை கடித்து குதறி ஒரு துளி கூட விடாமல் சுவைத்து குடித்துள்ளன. நீலகிரி மாவட்டம் கூடலூரில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. அப்போது டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. கடந்த இரண்டு வாரங்களுக்கு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. பல மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
கோவை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் நீடித்ததால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் தேங்காய் உடைத்து இன்று திறக்கப்பட்டன.

உடைந்த பாட்டில்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காளம்புழாபகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை திறந்த ஊழியர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. ஒயின் பாட்டில்களின் மூடி கடிக்கப்பட்டு துளி கூட மிச்சம் வைக்காமல் குடிக்கப்பட்டிருந்தது.

12 பாட்டில்கள் காலி
யார் இந்த வேலையை செய்தது என்று டாஸ்மாக் ஊழியர்கள் சோதனை செய்த போது திருமிகு எலியார்தான் இந்த வேலையை செய்திருப்பது தெரியவந்தது. ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 12 பாட்டில்களின் மூடிகளை கடித்து கீழே தள்ளி ஒயினை மிச்சம் வைக்காமல் சுவைத்துள்ளது தெரியவந்தது.

குஷியான எலிகள்
எலி குடித்த ஒயினின் மதிப்பு 2ஆயிரம் என கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகளுக்கு ஊழியர்கள் தகவல் தெரிவிக்கவே, விசாரணை நடைபெற்று வருகிறது. மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடையில் புகுந்து எலிகள் ஒயின் குடித்து விட்டு குஷியாக ஆட்டம் போட்ட சம்பவம் கூடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தரமான சம்பவங்கள்
இதென்ன பிரமாதம் இதை விட தரமான சம்பவங்கள் ஏற்கனவே பீகாரிலும் உத்தரபிரதேசத்திலும் நிகழ்ந்துள்ளன. அங்குள்ள காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 1000 லிட்டர் சாராய கேன்களின் கீழ் பகுதியை ஓட்டை போட்டு எலிகள் குடித்தது சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டு எலிகள் கொஞ்சம் காஸ்ட்லியாக ஒயின் குடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளன. திருவாளர் எலியார் இன்னும் என்னென்ன குடிக்கப் போகிறாரோ தெரியலையே.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications