தென்னாப்பிரிக்கா மாதிரியே.. சிங்கப்பூரில் ஓமிக்ரான் தொற்று உச்சம் தொடும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்
சிங்கப்பூர்: தென்னாப்பிரிக்கா போல் சிங்கப்பூரிலும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று புதிய உச்சத்தைத் தொடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த புத்தாண்டுக்குப் பிறகு கொரோனா பரவல் உலக அளவில் அதிகமாகப் பரவிவருகிறது. அதோடு ஒமிக்ரான் தொற்றும் சேர்ந்தே பரவுவதால் உலக நாடுகள் அச்சத்தில் இருக்கின்றன.
2019 சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி பல உயிர்களை பலிகொண்டது. இரண்டு ஆண்டுகள் ஆகியும் இந்த வைரஸ் தொற்றில் இருந்து முழுவதுமாக விடுபட முடியவில்லை. ஆனால் வைரஸ் உருமாறி பெயர்மாறி வந்து ஆட்டிப்படைக்கிறது.
கொரோனா தொற்றுக்குப்பிறகு டெல்டா என உருமாறிய கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. வேகமாகப் பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது டெல்டா. தற்போது தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது. இது டெல்டாவைவிட அதிவேகமாக பரவி வருகிறது.

சிங்கப்பூர்
ஒமிக்ரான் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்துகிறது. ஒமிக்ரான் தொற்று வேகமக பரவுகிறது. சிங்கப்பூரைப் பொருத்தவரை ஒமிக்ரான் விரைவில் புதிய உச்சத்தை எட்டும் என கண்டறியப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசி போட்டு உள்ளனர். ஒவ்வொரு 10 பேரில் 5 பேர் பூஸ்டர் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர்.

அதிகரிக்கும் பரவல்
சிங்கப்பூரில் ஒமிக்ரான் வைரஸ் அதிகமாகப் பரவி வருகிறது. தற்போது சுமார் எழுநூறு பேருக்கு ஒமிக்ரான் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. இதில் 541 பேருக்கு உள்நாட்டிலேயே ஒமைக்ரான் வைரஸ் பரவியதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இது இன்னும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கட்டுப்பாடுகள்
தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு ஒமிக்ரான் பரவியதை போல சிங்கப்பூரிலும் ஒமிக்ரான் வகை தொற்று பரவல் அதிகரிக்க கூடும் என தொற்று நோயியல் நிபுணர் அலெக்ஸ் குக் எச்சரிக்கை விடுத்து உள்ளார். சிங்கப்பூரில் தினசரி ஒமிக்ரான் பாதிப்பு 15 ஆயிரமாக அதிகரித்து வருகிறது. கட்டுப்பாடுகள் கடுமையானால் ஒமிக்ரான் குறையும் என்ற ரீதியில் நிபுணர் தெரிவித்திருக்கிறார். இதனால் சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் கடுமையாகலாம்.
Recommended Video

அனைவரும் பாதிப்பு
ஒவ்வொருவருக்கும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று ஏற்படும். பலருக்கு ஒமிக்ரான் பாதிப்பு வந்துபோனதே தெரியாது என்று மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஒமிக்ரானால் பெரும்பாலானோர் பாதிக்கப்படுவார்கள். ஒவ்வொருக்கும் இந்த நோய் தொற்று நிச்சயமாக வந்து செல்லும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications