அடுத்த லெவலில் ஆஸ்திரேலியா.. 16-17 வயதுடைய சிறுவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி.. அரசு அதிரடி
ஆஸ்திரேலியாவில் பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்துள்ளது
சிட்னி: 16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு ஆஸ்திரேலியா அனுமதி அளித்துள்ளது..!
கொரோனாவைரஸ் பரவலை உலக நாடுகளால் முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை.. எனினும், அதற்காக லட்சக்கணக்கான மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் போராடி வருகிறார்கள்..
அதற்கான சிகிச்சை, மருந்துகளை கண்டுபிடிக்க முயற்சித்தும் வருகிறார்கள். இப்போதைக்கு தடுப்பூசி மட்டுமே உலக நாடுகளுக்கு ஒரே ஆறுதலாக இருந்து வருகிறது..

பிரான்ஸ்
அந்த வகையில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், பிரான்ஸ், பிரேசில், இத்தாலி, சீனா உள்ளிட்ட நாடுகளில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றன... எனினும், உருமாறிய கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பூஸ்டர் தடுப்பூசிகளையும் பல்வேறு நாடுகள் அறிமுகம் செய்துள்ளன. அதன்படி, 2 டோஸ் போட்டபிறகு, 3வதாக பூஸ்டர் தடுப்பூசிகளையும் செலுத்தி கொள்ள ஒவ்வொரு நாடும் அனுமதி தந்து வருகின்றன..

மொத்த பாதிப்பு
அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள சிறார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. இப்போதைக்கு அந்த நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பானது, 2,465,811 ஆக உயர்ந்துள்ளது... இதுவரை மொத்தம் 3,465 பேர் உயிரிழந்துள்ளனர்.. இது மற்ற நாடுகளை ஒப்பிடும்போது குறைவான எண்ணிக்கை என்றாலும், இறப்பு விகிதத்தை மேலும் கட்டுப்படுத்த அந்த நாடு முயன்று வருகிறது.

தடுப்பூசி
அதற்காகத்தான் பூஸ்டர் தடுப்பூசிகளில் கவனத்தை திருப்பி உள்ளது.. அதிக அளவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று.. இதுவரை 93 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் 2 டோஸ் தடுப்பூசியும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 35 சதவீதம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் பெற்றுள்ளனர்... 5 முதல் 11 வயதுள்ள குழந்தைகளுக்கு இந்த மாத தொடக்கத்தில் இருந்து தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
Recommended Video

அனுமதி
இந்நிலையில் 16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய மருத்து கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார்... அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிரிட்டனில் சிறுவர்களுக்கு பூஸ்டராக பயன்படுத்தப்படும் ஃபைசரின் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியாவிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.. அதுமட்டுமல்ல, ஒமிக்ரான் பரவல் காரணமாக கொரோனா 3வது அலையை தடுக்க, பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்வதை மக்கள் விரைவுபடுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications