விவசாயிகளின் பிரச்சினைகள்: மோடியை சந்திக்க திமுக அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவு
விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை: விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பிரதமரை சந்திக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
வறட்சி நிவாரணம், பயிர்க் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை மத்திய அரசு கண்டு கொள்ளாததை தொடர்ந்து திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

யார் யார் பங்கேற்பு?
அதன்படி இன்று நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. இதில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

என்ன தீர்மானங்கள்?
குடிநீர் பிரச்சினைக்கு போர்கால அடிப்படையில் தீர்வு காண்பது, மற்ற மாநிலங்கள் தமிழக நதிகளில் தடுப்பணைகள் கட்டுவதைத் தடுப்பது, மதுவிலக்கை அமல்படுத்த கோருவது, விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக பேரவையில் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலாமாக அறிவிக்க வேண்டும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தமிழகத்தில் கைவிடப்பட வேண்டும்.

நீட்டுக்கு விலக்கு
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க தமிழக பேரவையில் கொண்டு வந்த அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பது, விவசாயிகளின் தற்கொலையை தடுப்பது, நெல் , கரும்பு ஆகியவற்றுக்கு உரிய விலையை நிர்ணயிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமரை சந்திப்பது என 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

25-இல் வேலை நிறுத்தம்
விவசாயிகள் நலனை வலியுறுத்தி வரும் 25-ஆம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று திமுக சார்பில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும் 22-ம் தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications