செங்கத்தில் விவசாயி மர்ம மரணம்.. வனத்துறை ஊழியர்கள் 4 பேர் கைது!
செங்கத்தில் மணல் அள்ளிய விவசாயி மர்மமாக உயிரிழந்த விவகாரத்தில் வனத்துறை ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை: செங்கத்தில் மணல் அள்ளிய விவசாயி மர்மமாக உயிரிழந்த விவகாரத்தில் வனத்துறை ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வனத்துறையினர் தாக்கியதில் திருமலை என்பவர் உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. சந்தாகவுண்டன்புதூர் வனப்பகுதியில் மாட்டுவண்டியில் மணல் ஏற்றி வந்த திருமலை என்பவர் மர்மமாக இருந்து கிடந்தார்.
வனத்துறையினர்தான் திருமலையை அடித்துக்கொன்றதாக குற்றம்சாட்டிய கிராம மக்கள் வனத்துறை ஊழியர்களை சரமாரியாக தாக்கினர். மேலும் வனத்துறை ஊழியர்களின் வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர்.

காவல்துறை தடியடி
வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் நடத்தி விரட்டியதால் ஆத்திரமடைந்த மக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

போர்க்களம் போல் காட்சியளித்தது
பதிலுக்கு காவல்துறையினரும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வனத்துறை ஊழியர்கள் மீது வழக்கு
இதுதொடர்பாக கிராம மக்கள் 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விவசாயி திருமலை மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து செங்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.

திருமலை கொலை - கைது
இந்நிலையில் திருமலை கொலை செய்யப்பட்ட வழக்கில் வனத்துறை ஊழியர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வனத்துறை ஊழியர்கள் தாண்டவராயன், சதீஷ், தினகரன் உட்பட 4 வன ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications