மூவர் தூக்கு ரத்து: மரண தண்டனைக்கு எதிரான ஒரு தாயின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
சென்னை: "மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் என்பது என்னுடைய மகனுக்கான போராட்டம் மட்டுமல்ல. மாறாக, ஒட்டுமொத்தமாக மரண தண்டனையே இந்தியாவில் நிறைவேற்றப்படக் கூடாது" என்பதுதான் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் முழக்கம்.
மரணக்கொட்டடியில் 23 ஆண்டுகாலமாய் வாடும் மகனின் உயிரை காக்க தாயாக அற்புதம்மாள் நடத்திய போராட்டங்களை வார்த்தைகளினால் சொல்ல முடியாது.
தூக்குக்கான காலம் குறிக்கப்பட்ட உடன் மகனின் உயிரைக்காக்க அழுத கண்ணீர்தான் தண்டனையை நிறுத்திவைக்க காரணமாக இருந்தது. இன்றைக்கு மரணதண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டிருக்கிறது.

மகிழ்ந்த அற்புதம்மாள்
மரணத்தின் வாயிலில் இருந்து மகனை மீட்ட ஈன்ற பொழுதை விட பெருமகிழ்ச்சி அடைந்திருப்பார். ஆனாலும் மகனுக்காக மட்டுமல்லாது மரணத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் என்று கூறுகிறார் இந்தத் தாய்.

என் மகனும் விடுதலையாவான்
கடந்த ஜனவரி 22ம் தேதி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த வீரப்பன் கூட்டாளிகளுக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட போதே என் மகனும் விடுதலையாவான் என்று நம்பிக்கையோடு கூறினார் அற்புதம்மாள். அந்த தாயின் நம்பிக்கை வீணாகவில்லை.

சென்னை புத்தக கண்காட்சியில்
கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் அரங்கு ஒன்றினை வாடகைக்கு எடுத்து தூக்குத் தண்டனைக்கு எதிரான புத்தகங்கள், சி.டி.க்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தி விற்பனை செய்தார் அற்புதம்மாள்.

மரண தண்டனைக்கு எதிராக
தன் அரங்கிற்கு வந்த வாசகர்களிடம் தூக்குத் தண்டனை என்பது மனிதனுக்கு அளிக்கக் கூடிய அநீதியின் உச்சக்கட்டம் என்றும், இது மனித சமூகத்திற்கு எதிரானது என்றும் பிரச்சாரம் செய்தார்.
இந்தியாவில் இனிமேல் யாருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்படக் கூடாது "இந்தப் பணத்தைச் செலவழிப்பதன் மூலம் என்னுடைய மகன் தூக்கில் இருந்து காப்பாற்றப்படுவான் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

போராட்டத்திற்கு விடிவு
மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்த உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ளது. 23 ஆண்டுகாலம் சிறையில் தண்டனை அனுபவித்த தனது மகன் எப்போது விடுதலையாவான் என்று தெரியாமல் தவிக்கிறார் இந்த தாய்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications