தி.நகர் திருப்பதி தேவஸ்தான கோவிலில் நர மாமிசம் சாப்பிடும் அகோரிகள் சுவாமி தரிசனமா? திடீர் பரபரப்பு
சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி வேதஸ்தான கோவிலுக்கு அகோரிகள் வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : சென்னை தியாகராயர் நகரில் உள்ள வெங்கட் நாராயணா சாலையில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பதி ஏழுமலையான், ஆண்டாள் சிலை வைத்து பூஜை செய்யப்படுகிறது. திருப்பதி செல்ல முடியாதவர்கள் பண்டிகை காலங்களில் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வர்.
இதேபோன்ற பக்தர்கள் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதம் கடைபிடிப்பவர்களும் இங்கு வந்து தங்களது வேண்டுதல்களை செலுத்திவிட்டு சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று காலை 5 மணி முதல் 12 மணி வரை சுவாமி தரிசனம் கிடையாது என்று தேவஸ்தானம் அறிவித்திருந்தது. சில பூஜை பரிகாரங்கள் காரணமாக நடை சாத்தப்படுவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான கோவிலுக்குள் அகோரிகள் சுவாமி தரிசனம் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் உடைகளின்றி உடல் முழுவதும் திருநீறு பூசிய அகோரி ஒருவரும் அவரைத் தொடர்ந்து கோவி வேஷ்டி அணிந்த மற்றொரு அகோரியும் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

மனித மாமிசம் உண்ணும் அகோரிகள் தேவஸ்தான கோவிலுக்குள் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் குருக்கள் கோவிலை பூட்டியதாகத் தெரிகிறது. மேலும் கோவிலில் தீட்டுபட்டுவிட்டதாகக் கூறி கோவிலை சுத்தம் செய்வதற்காகவே கோவில் பூட்டப்பட்டதாகவும். அகோரிகள் வந்து சென்றதையடுத்து கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதன் பின்னர் மக்கள் வழிபாட்டிற்காக திறந்த விடப்பட்டதாகத் தெரிகிறது.
-
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை!











Click it and Unblock the Notifications