ஆர்கே நகரில் 450 பேருக்கு ரூ. 20 டோக்கன்... போலீசில் சிக்கியவர் ஒப்புதல் வாக்குமூலம்!
சென்னை ராதாகிருஷ்ணன் நகரில் வாக்காளர்களுக்கு டோக்கனாக ரூ. 20 என 450 பேருக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதை போலீசிடம் சிக்கிய நபர் ஒப்புகொண்டுள்ளார்.
Recommended Video

சென்னை : ஆர்கே நகரில் நடந்த நூதன பணப்பட்டுவாடாவில் 450 பேருக்கு டோக்கனாக ரூ. 20 வழங்கப்பட்டது உண்மை தான் என்று போலீசில் சிக்கிய நபர் தெரிவித்துள்ளார். அவரிடம் இருந்து பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
சென்னை ராதாகிருஷ்ணன் நகருக்கு நடந்த தேர்தலில் கடைசி கட்டத்தில் வாக்காளர்களைக் கவர 20ம் தேதி நள்ளிரவு வாக்காளர்களுக்கு ரூ. 20 நோட்டை டோக்கனாக கொடுத்து ஹவாலா முறையில் பணப்பட்டுவாடா தினகரன் தரப்பு உறுதி அளித்துள்ளதாக பாஜக வேட்பாளர் கரு. நாகராஜன் கூறி இருந்தார்.
தினகரன் வெற்றி பெற்றால் 10 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என்று வாக்காளர்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் முடிந்த பின்னரும் மக்கள் பணம் கிடைக்கும் என்று காத்திருக்கின்றனர்.

தினகரன் ஆதரவாளர்களுக்கு நச்சரிப்பு
20 ரூபாய் நோட்டை கொடுத்த கையோடு அதில் உள்ள சீரியல் எண்களையும் தினகரன் ஆதரவாளர்கள் குறித்து சென்றதாக கூறப்படுகிறது. தினகரன் தேர்தலில் வெற்றி பெற்றதால் டோக்கன் வாங்கிய மக்கள் குஷியாகினர். இதனையடுத்து டோக்கன் பணம் கொடுத்தவர்களை தொடர்பு கொண்டு பணத்தை கேட்டுள்ளனர்.

காத்திருக்கும் மக்கள்
சிலர் இரண்டு நாட்களில் தருவதாக சொன்னதோடு, சிலர் மொபைல் போனை எல்லாம் ஆப் செய்து விட்டு தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. இருப்பினும் பலர் நம்பிக்கையோடு அந்த 20 ரூபாய் நோட்டை செலவு செய்து விடாமல் பொக்கிஷமாக வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

தரவில்லை என தகராறு
இதனிடையே புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தினகரனின் ஆதரவாளராக ஜான் பீட்டரிடம் தனக்கு ஏன் 20 ரூபாய் தரவில்லை என்று கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் கார்த்திகேயன் தாக்கப்பட்டதாக போலீசிடம் புகார் அளித்துள்ளார்.

450 பேருக்கு வழங்கியதாக ஒப்புதல்
இந்த புகாரின் பேரில் ஜான்பீட்டர், சரண்ராஜ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது ஜான் பீட்டர் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் 450 பேருக்கு 20 ரூபாய் நோட்டு கொடுத்துள்ளதை ஒப்புகொண்டுள்ளார். மேலும் அடுத்தடுத்த வரிசை எண்களைக் கொண்ட ரூபாய் நோட்டுகள் விநியோகம் செய்யப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களும் போலீசாருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications