மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி தான் இந்திய இறையாண்மை நிலைக்க ஒரே வழி: சீமான்
மாநிலத்தில் சுயாட்சி ; மத்தியில் கூட்டாட்சி தத்துவம் தான் இந்திய இறையாண்மை நிலைக்க ஒரே வழி என்று சீமான் குறிப்பிட்டு உள்ளார்.
நெல்லை : மாநிலத்தில் சுயாட்சி ; மத்தியில் கூட்டாட்சி என்கிற தத்துவம் தான் இந்திய இறையாண்மை நிலைக்க ஒரே வழி என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறிப்பிட்டு உள்ளார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் 2009ம் ஆண்டு நடந்த கூட்டம் ஒன்றில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக சீமான் மீது வழக்குத்தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று நெல்லை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சீமான் நேரில் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ராம்தாஸ் வழக்கை மார்ச் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதன் பிறகு நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்த சீமான் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அவரிடம் பட்ஜெட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த சீமான், பாஜக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டை, எஞ்சிய ஒரு ஆண்டில் எதையும் நிறைவேற்ற முடியாது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலையும் கருத்தில் கொண்டே பட்ஜெட்டை வெளியிட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்திற்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது அவசியமற்றது. மாநிலத்திற்கு தனியாகவும், மத்தியில் தனியாகவும் தேர்தல் நடத்த வேண்டும். இரண்டிற்கும் ஒரே செலவுதான் ஆகும்.
பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜக ஆட்சிக்கு வர முடியாது. மத்தியில் இந்த முறையோடு பாஜக ஆட்சி முடிவு பெறும். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவத்தின்படி தான் ஆட்சி அமைய வேண்டும். அதுதான் இறையாண்மை நிலைக்க ஒரே வழி. பாஜகவிற்கும், காங்கிரஸிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
இந்தியாவில் உள்ள அனைத்து இனத்திற்கும் பிரதமர் ஆகும் வகையில் சுழற்சி முறையில் கூட்டாட்சி முறையை அமல்படுத்த வேண்டும். அப்போது தான் இந்திய இறையாண்மை வலுப்பெறும். அடுத்து வரும் சட்டசபைத் தேர்தலில் நாங்கள் தமிழ், தமிழர்கள் அமைப்புகளுடன் ஒன்று சேர்ந்து தேர்தலில் நிற்போம் என்று சீமான் தெரிவித்து உள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications