கோவை: பாஜக வேட்பாளர் மீது அதிமுகவினர் கண்மூடித்தனமான தாக்குதல் – கார் ஏற்றி கொல்ல முயற்சி
கோவை: கோயமுத்தூர் மாநகராட்சியில் பாஜக சார்பில் போட்டியிடும் மேயர் வேட்பாளர் நந்தகுமார் இன்று அதிமுகவினரால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டார்.
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நகர் முழுவதும் போலீசார் ரோந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.
உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் செவ்வாய்கிழமை மாலையுடன் ஓயந்தது. பிரசாரம் முடிந்ததும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உடனே வெளியேற வேண்டும் என்று தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி இருந்தது.
இந்த நிலையில் புதன்கிழமை காலை கோவை சவுரிபாளையம் பகுதியில் போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் பணம் பட்டுவாடா செய்வதற்காக நின்று கொண்டிருப்பதாக பாஜக வேட்பாளர் நந்தகுமாருக்கு தகவல் கிடைத்தது. மறுநிமிடமே நந்தகுமாரும் மற்றும் பாஜக தொண்டர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
‘வெளிமாவட்டத்தை சேர்ந்த நீங்கள் ஏன் இங்கு நிற்கிறீர்கள், உடனே இங்கிருந்து வெளியேறுங்கள்' என்றனர். இதனால் அ.தி.மு.க.வினர் ஆத்திரமடைந்து ‘எங்களை வெளிறேச் சொல்ல நீங்கள் யார்? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அந்த சமயத்தில் அ.தி.மு.க.வினர் பாஜக வேட்பாளர் நந்தகுமாரை தாக்கியதோடு காரை ஏற்றி கொல்ல முயன்றதாகவும் தெரிகிறது. அங்கிருந்து பாஜக தொண்டர்கள் வேட்பாளரை பிடித்து இழுத்ததால் அவர் உயிர் தப்பினார். இதனையடுத்து அந்த பகுதியில் பரபரப்பும்- பதட்டமும் நிலவியது.
இந்த களேபரம்பற்றி அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வாக்குவாதம் மற்றும் கைகலப்பில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரையும், பாஜகவினரையும் சமாதானம் செய்து அங்கிருந்த அனுப்ப முயன்றனர். அவர்களின் முயற்சிக்கு பலன் இல்லை.
இந்த நிலையில் சிங்காநல்லூர் எம.எல்.ஏ. சின்னசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சின்னசாமி எம்.எல்.ஏ.யுடன் வந்த காரும் அடித்து நொறுக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க. வினர் பாஜக கொடி கட்டப்பட்டிருந்த வாகனத்தை அடித்து நொறுக்கினர். தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் அந்த பகுதியில் துணை கமிஷனர் பர்வேஸ்குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதை அடுத்து, பீளமேடு காவல்நிலையம் முன் குவிந்த பாஜகவினர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அவர்களுடன் கூட்டணிக் கட்சிகளான மதிமுக தேமுதிக கட்சி நிர்வாகிகளும் உடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல் -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக












Click it and Unblock the Notifications