புழல் சிறையில் கைதிகளிடமிருந்து செல்போன், கத்திகள் பறிமுதல் - போலீசார் அதிர்ச்சி
புழல் ஜெயிலில் கைதிகளிடமிருந்து செல்போன், கத்திகளை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை: புழல் சிறையில் கைதிகளிடம் செல்போன், கத்திகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புழல் மத்திய சிறையில் 700-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் கைதிகளிடம் கஞ்சா புழக்கம் இருப்பதாக அடிக்கடி புகார்கள் வந்தன. மேலும் செல்போன்களை பயன்படுத்தி வெளியில் உள்ள ரவுடிகளிடம் கைதிகள் பேசுவதாகவும் புகார் கூறப்பட்டது. சமீபத்தில் வெளியில் இருந்து சிறைக்குள் கஞ்சா பொட்டலங்கள் வீசிய சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து புழல் ஜெயிலில் போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகிறார்கள். இருந்தபோதும் கைதிகளிடம் செல்போன் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் புழல் சிறையில் செல்போன், கஞ்சா போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்து உள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் மாதவரம் துணை கமிஷனர் கலைச் செல்வன், எண்ணூர் உதவி கமிஷனர் தினகரன், புழல் உதவி கமிஷனர் பிரபாகரன் மற்றும் 63 போலீசார் இன்று காலை புழல் சிறையில் அதிரடி சோதனை மேற்கொண்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கைதிகள் இருந்த ஒவ்வொரு அறைக்கும் தனித்தனியாக சென்று இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், கைதி ஒருவரிடம் செல்போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல, மற்றொரு கைதியிடம் 2 சிறிய கத்திகள் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து செல்போன், மற்றும் கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அத்துடன் செல்போன் சார்ஜர், சிம்கார்டு, ரூ.500 பணம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜெயிலுக்குள் செல்போன், கத்திகள் பறிமுதல் செய்தது குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறைக்குள் பணம், செல்போன், மற்றும் கத்திகள் எப்படி வந்தன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications