ரயில் ஓடும்போது குண்டு வெடிக்கத் திட்டமிட்டிருந்த தீவிரவாதிகள்.. பலிக்காததால் பேரழிவு தடுப்பு
சென்னை: குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் வைக்கப்பட்ட வெடிகுண்டு, ரயில் ஓடும்போது வெடிக்கும் வகையில் செட் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அது தவறி ரயில் சென்னை வந்து சேர்ந்ததும் வெடித்ததால்தான் மிகப் பெரிய பேரழிவு தடுக்கப்பட்டுள்ளதாக வெடிகுண்டு நிபுணர்கள் கூறியுள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த வெடிகுண்டுச் சம்பவம் குறித்து விசாரித்து வரும் நிபுணர்கள் இக்கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வெடித்தது சாதாரண திறன் கொண்ட குண்டுதான். ஆனால் அந்த குண்டுகளை பயன்படுத்தத் திட்டமிட்டிருந்ததுதான் பயங்கரமானது.
அதாவது ரயில் ஓடிக் கொண்டிருக்கும்போது இதை வெடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளனர். இது டைம் பாம் குண்டுதான்.
இந்த குண்டு ஓடும் ரயிலில் வெடித்திருந்தால் மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டிருக்கும். அதாவது ரயிலில் தீப்பிடித்து பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும். ரயில் பெட்டிகள் தடம் புரண்டு பலர் உயிரிழந்திருப்பார்கள். மிகப் பெரிய சேதத்தை நாம் சந்தித்திருப்போம். அதைத்தான் தீவிரவாதிகளும் எதிர்பார்த்துள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக ரயில் நிலையத்திற்குள் வந்த பின்னர் குண்டு வெடித்ததால் சிறிய இழப்போடு இது நின்று விட்டது என்றனர்.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications