“செங்கல் வார்க்கும் கருவி” கண்டுபிடித்து 7ம் வகுப்பு மாணவி சாதனை
திருவாரூர்: திருவாரூரில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் செங்கலை வார்க்கும் கருவி ஒன்றினைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஆர்த்தி. இவர் செங்கல்களை எளிய முறையில் வார்க்கும் கருவியை வடிவமைத்து கண்டுப்பிடித்துள்ளார்.

இந்த கருவியில் இரண்டு வீல் பொருத்தப்பட்டு அதில் செங்கல் தயாரிக்க தேவையான களி மண்களை கொட்ட டப்பா போன்ற ஒரு பகுதியை உருவாக்கி அதில் களி மண்ணை கொட்டி கையால் தள்ளினால் தானாக கீழ் பகுதியிலிருந்து களி மண் செங்கல் வடிவத்தில் நீளமாக வருகிறது. அதில் ஒரு பகுதியில் அளவுக்கு ஏற்றது போல் செங்கல் அறுத்து பிரிவது போன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதன் செயல் விளக்க நிகழச்சியை அவர் ஆலங்காடு செங்கல் சூளை பகுதியில் மாணவி செய்து காட்டினார். இதில் செங்கல் சூளை தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் ஆர்வத்துடன் மாணவியின் கண்டுபிடிப்பைப் பார்த்து வியந்தனர்.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ராமலிங்கம் உதவி தலைமை ஆசிரியர் ஆண்டனி அந்தோனி ராஜ், ஆசிரியர்கள் செல்வ சிதம்பரம், சாமிநாதன் ஆசிரியை முத்துலெட்சுமி மற்றும் கிராம மக்கள் கலந்துக் கொண்டு மாணவி ஆர்த்தியைப் பாராட்டினர். மாணவி ஆர்த்தி கண்டுபிடித்த இந்த கருவி நாளை 11 ஆம் தேதி மன்னார்குடியில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சியில் இடம் பெற இருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications