சென்னை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய அசாம், வங்க தேச வாலிபர்களிடம் தீவிர விசாரணை
சென்னை: சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அசாம் மற்றும் வங்கதேச வாலிபர்களுக்கு சென்னை குண்டுவெடிப்பில் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த ஒன்றாம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் இளம்பெண் ஒருவர் பலியானார். 14 பேர் படுகாயடமைந்தனர். இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய சதிகாரர்களைப் சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அசாம் வாலிபர் ஒருவர் அரக்கோணம் ரயில் நிலையத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டார். அதேபோல், சென்னை எண்ணூரில் பாஸ்போர்ட் இல்லாமல் சுற்றித்திரிந்த வங்கதேச வாலிபர் ஒருவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடன் நடத்தப்பட்ட விசாரணையில், அரக்கோணத்தில் கைது செய்யப் பட்ட வாலிபர் இரிடியம் திருடும் கும்பலைச் சேர்ந்தவர் என்றும், எண்ணூரில் கைது செய்யப் பட்ட வாலிபர் மனநிலை பாதிப்படைந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.
ஆனபோதும், கைது செய்யப்பட்டவர்களிடம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு சம்பவம் குறித்தும் விசாரணை நடைபெற்றது.
இதுவரை கிடைத்த தகவல்களின் படி, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்ட அந்த அசாம் மற்றும் வங்கதேச வாலிபர்களுக்கு சென்னைக் குண்டுவெடிப்பில் சம்பந்தம் இல்லை எனத் தெரிய வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆயினும், அரக்கோணம் வாலிபர் மீது இரிடியம் திருட்டு தொடர்பாகவும், வங்க தேச வாலிபர் மீது பாஸ்போர்ட் உள்ளிட்ட முறையான ஆவணம் இல்லாதது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப் படும் எனத் தெரிகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications