சென்னை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய அசாம், வங்க தேச வாலிபர்களிடம் தீவிர விசாரணை
சென்னை: சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அசாம் மற்றும் வங்கதேச வாலிபர்களுக்கு சென்னை குண்டுவெடிப்பில் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த ஒன்றாம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் இளம்பெண் ஒருவர் பலியானார். 14 பேர் படுகாயடமைந்தனர். இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய சதிகாரர்களைப் சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அசாம் வாலிபர் ஒருவர் அரக்கோணம் ரயில் நிலையத்தில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டார். அதேபோல், சென்னை எண்ணூரில் பாஸ்போர்ட் இல்லாமல் சுற்றித்திரிந்த வங்கதேச வாலிபர் ஒருவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடன் நடத்தப்பட்ட விசாரணையில், அரக்கோணத்தில் கைது செய்யப் பட்ட வாலிபர் இரிடியம் திருடும் கும்பலைச் சேர்ந்தவர் என்றும், எண்ணூரில் கைது செய்யப் பட்ட வாலிபர் மனநிலை பாதிப்படைந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.
ஆனபோதும், கைது செய்யப்பட்டவர்களிடம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு சம்பவம் குறித்தும் விசாரணை நடைபெற்றது.
இதுவரை கிடைத்த தகவல்களின் படி, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்ட அந்த அசாம் மற்றும் வங்கதேச வாலிபர்களுக்கு சென்னைக் குண்டுவெடிப்பில் சம்பந்தம் இல்லை எனத் தெரிய வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆயினும், அரக்கோணம் வாலிபர் மீது இரிடியம் திருட்டு தொடர்பாகவும், வங்க தேச வாலிபர் மீது பாஸ்போர்ட் உள்ளிட்ட முறையான ஆவணம் இல்லாதது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப் படும் எனத் தெரிகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications