கடலூர் அரசு மருத்துவமனையில் செல்போனை ஆட்டைய போட்டவர் கைது,, சிசிடிவி காட்சியால் சிக்கினார்!
கடலூர் அரசு மருத்துவமனையில் செல்போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர்,
Recommended Video

கடலூர்: கடலூர் அரசு மருத்துவமனையில் நோயாளி போல் உள்ளே சென்று டாக்டர் மற்றும் செவிலியர்களின் செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர் ஒருவர் சிசிடிவி கேமரா மூலம் வசமாக மாட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் செல்போன்கள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார் எழுந்துவந்தது,

போலீசார் ஆய்வு
இதைபோல் கடந்த 12ம் தேதி அவசர சிகிக்சை பிரிவில் இருந்த மருத்துவரின் விலைஉயர்ந்த செல்போனை திடீரென காணாமல் போனதால் அவர் போலீசில் புகார் அளித்தார்.இதனையடுத்து அவசர சிகிக்சை பிரிவில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

டிப்டாப் ஆசாமி
அதில், அவசர சிகிச்சை பிரிவுக்குக் கடந்த 12ஆம் தேதி மதியம் ஒரு டிப்டாப் ஆசாமி உள்ளே வருகிறார். அப்போது பணியில் பெண் மருத்துவர் ஒருவர் மேஜை மீது கைப்பேசியும் வாட்டர் பாட்டிலும் வைத்தபடி வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டுள்ளார். நோயாளியாக வந்த அந்த மர்ம நபர் அமரும் ஸ்டூலில் அமருகிறார். மருத்துவர் அவசரக் கேஸைப் பார்க்க எழுந்து விசாரித்துக் கொண்டிருந்தபோது, அந்த நபர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மேஜை மீதிருந்த செல்போனை எடுத்து பேன்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு பதற்றமில்லாமல் நடந்துசெல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

போலீசார் அதிரடி கைது
புதுநகர் காவல் நிலைய போலீஸார் அந்த நபரின் அடையாளத்தை வைத்து அவரை கைது செய்தனர். அந்த நபர் கடலூர் கம்பியம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் அவர் மதுவுக்கு அடிமையானவர் என்று தெரிந்தது. குடிப்பதற்கான செலவுக்காகவே அவர் இப்படித் திருடுகிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவர் புதுச்சேரி எல்லையில் இருக்கும் சாராயக் கடையில் திருடிய செல்போன்களை விற்றுள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தர்மஅடி வாங்கியவர்
அங்கு சென்ற போலீஸார் திருடிய செல்போனைப் பெற்றுக்கொண்டு அவரை எச்சரித்து அனுப்பி விட்டனர். திருடனைப் பற்றி விசாரித்ததில் கடலூரில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கைவரிசைகளைக் காட்டியுள்ளதும், சமீபத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் திருட முயன்றபோது பிடிபட்ட அவருக்கு மக்கள் தர்ம அடி கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications