சீனப்பட்டாசு விற்பனையைத் தடுக்க தனிப்படை... தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: சீனப்பட்டாசு விற்பனையை தடுக்க தனிப்படை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி என்றாலே முதலில் நினைவிற்கு வருவது புத்தாடைகளும், பட்டாசும் தான். இந்தியா முழுவதும் 930 பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் 805 நிறுவனங்கள் சிவகாசியில் உள்ளன.
குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியை பட்டாசு தொழிலின் தாய்வீடு என்றே கூறலாம். லட்சக்கணக்கான தொழிலாளர்கள், நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளில் உயிரை பணயம் வைத்து, ஆபத்தான சூழ்நிலையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்தியாவில் பட்டாசு உற்பத்தியில் 5 லட்சம் பேர் நேரடியாகவும், 85 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.ஆனால், சீனப்பட்டாசுகளின் வரவால் சிவகாசி மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளது.
சீனப்பட்டாசுகளின் வரவால் கடந்த ஆண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 35 சதவீத பட்டாசுகள் தேக்கமடைந்து, பட்டாசு தொழிற்சாலைகளுக்கு இழப்பு எற்பட்டது. வணிக ரீதியாக மட்டுமின்றி மக்களிற்கு ஆபத்து விளைவிப்பவை சீன பட்டாசுகள். பொட்டாசியம் குளோரைடு, பொட்டாசியம் பெர்குளோரைடு உள்பட பல்வேறு ஆபத்து விளைவிக்கும் வேதி பொருட்கள் அதில் அடங்கியுள்ளன.
எனவே, சீன பட்டாசுக்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுவதைத் தடை செய்ய கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டாசு விற்பனையாளர்கள் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், சீனப்பட்டாசு விற்பனையை தடுக்க தனிப்படை அமைக்க வேண்டும் என இன்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சீனப்பட்டாசு நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ள அவர், சீனப்பட்டாசு இறக்குமதி செய்யப்பட்டால் அவற்றை அரசு பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட சீனப்பட்டாசுகளை உடனே அழிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications