கனமழை எதிரொலி: சோழவரம் ஏரிக்கரையில் 40 அடிக்கு விரிசல் - ஏரி உடையும் அபாயம்
சென்னை: கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் சோழவரம் ஏரியில் 40 அடி தூரத்திற்கு விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த ஏரி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. இதன் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தற்போது இதில் 737 மில்லியன் கன அடி நீர் உள்ளது. மழைநீர் மூலமாக மேலும் 2,411 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்காக நாள்தோறும் விநாடிக்கு 50 கன அடி நீர் அனுப்பப்படுகிறது.

இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 881 மில்லியன் கன அடி. தற்போது 267 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. மழைநீர் 822 கன அடி வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சோழவரம் ஏரியின் மதகு பகுதியில் 40 அடி தூரத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சோழவரம் ஏரிக்கு அதிகாரிகளுடன் நேரில் சென்று அம்மாவட்ட ஆட்சியாளர் வீரராகவராவ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சோழவரம் ஏரியை பலப்படுத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
நேற்று முன்தினம் மாலை சோழவரம் ஏரிக்கரையில் 40 அடி தூரத்தில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. கனமழை காரணமாக ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஏரி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications