கனமழை எதிரொலி: சோழவரம் ஏரிக்கரையில் 40 அடிக்கு விரிசல் - ஏரி உடையும் அபாயம்
சென்னை: கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் சோழவரம் ஏரியில் 40 அடி தூரத்திற்கு விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த ஏரி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. இதன் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தற்போது இதில் 737 மில்லியன் கன அடி நீர் உள்ளது. மழைநீர் மூலமாக மேலும் 2,411 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்காக நாள்தோறும் விநாடிக்கு 50 கன அடி நீர் அனுப்பப்படுகிறது.

இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 881 மில்லியன் கன அடி. தற்போது 267 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. மழைநீர் 822 கன அடி வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சோழவரம் ஏரியின் மதகு பகுதியில் 40 அடி தூரத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சோழவரம் ஏரிக்கு அதிகாரிகளுடன் நேரில் சென்று அம்மாவட்ட ஆட்சியாளர் வீரராகவராவ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சோழவரம் ஏரியை பலப்படுத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
நேற்று முன்தினம் மாலை சோழவரம் ஏரிக்கரையில் 40 அடி தூரத்தில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. கனமழை காரணமாக ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஏரி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
-
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தாலும் சிக்கல் வராது.. ஆனால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் மறக்காதீங்க! -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க












Click it and Unblock the Notifications