தோடு, ஷூ போடக்கூடாது... கடும் கட்டுப்பாடுகளுடன் முதல்கட்ட பொது மருத்துவ நுழைவுத்தேர்வு நிறைவு
சென்னை: உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததைத் தொடர்ந்து, நாடுமுழுவதும் இன்று முதல்கட்ட பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் 39 இடங்களில் இத்தேர்வு நடைபெற்றது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு தேசிய தகுதி காண் தேர்வை (என்.இ.இ.டி.) நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், இந்த உத்தரவால் தமிழக கிராமப்புற மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், பொது மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்க இயலாது என உச்சநீதிமன்றம் தெரிவித்து விட்டது.
அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் இன்று பொது மருத்துவ நுழைவுத் தேர்வின் முதல்கட்ட தேர்வு நடைபெற்றது. இதன் அடுத்த கட்டமாக ஜூலை 24-ஆம் தேதி 2-ஆம் கட்ட தேசிய தகுதி காண் தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் இந்தத் தேர்வு சென்னையில் மட்டுமே நடைபெற்றது. 39 இடங்களில் நடைபெற்ற இத்தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள 26,000 மாணவர்கள் எழுதினர்.
தேர்வு மையங்களில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுப்பதற்காக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தேர்வு அறைக்குள் மாணவர்கள் எவ்வித பொருள்களையும் எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
அதோடு, மாணவர்கள் தேர்வு அறைக்குள் ஷூ அணிந்து செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மாணவிகள் தோடு, செயின் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இவ்வாறு கடுமையான சோதனைக்குப் பின்னரே மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் குழப்பமான மனநிலையிலேயே தேர்வை எதிர்கொண்டதாக பல மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications