காங்கிரஸ் மேலிடத்தின் அக்கறையின்மையே நாங்கள் வெளியேற காரணம்- எஸ்.ஆர். பாலசுப்ரமணியன்
கோவை: காங்கிரஸ் கட்சித் தலைமை தமிழக பிரச்னைகளிலும், தமிழகத்தில் ஏற்பட்ட உட்கட்சிப் பிரச்னைகளிலும் போதிய அக்கறை செலுத்தாததால் தனிக்கட்சி அமைக்க வேண்டிய நிலைமை உருவானதாக ஜி.கே.வாசன் ஆதரவாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.ஆர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், "தமிழகத்தில் கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் 21 சதவீதமாக இருந்து வந்தது.
ஆனால் காங்கிரஸ் கட்சி தலைமை, தொடர்ந்து தமிழக பிரச்னைகளில் போதிய அக்கறை செலுத்தாததால் வாக்கு சதவீதம் குறையத் துவங்கியது.
தமிழகம் சார்ந்த பிரச்னைகளிலும், தமிழக காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பிரச்னைகளிலும் போதிய கவனம் செலுத்தாததன் காரணமாக தற்போது காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் வெறும் 5 சதவீதமாக குறைந்து போனது. தேர்தல் கூட்டணி தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதில் கட்சி மேலிடத்தின் செயல்பாடற்ற தன்மையாலும் வாக்கு சதவீதம் குறைந்து போனது.
தமிழகத்தில் மட்டுமின்றி, மற்ற மாநிலங்களிலும் இதே நிலைதான் நிலவுகிறது. கட்சி தலைமையின் இந்த நடவடிக்கையால் அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டு, தனி இயக்கம் உருவாக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
வாசன் தலைமையிலான புதிய கட்சியின் பெயர், கொடி ஆகியவை திருச்சி பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும். அதன்பின்னர் தேர்தல் குறித்தெல்லாம் விவாதிக்கப்படும். புதிய இயக்கத்துக்கு அனைத்து தரப்பு மக்களிடமும் ஆதரவு கேட்டு வருகிறோம் " என்று தெரிவித்துள்ளார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications