திடீரென சிறிது நேரம் மயான அமைதியான வர்தா புயல் - சென்னை மூழ்கப் போவதாக பரவிய வதந்தியால் அச்சம்
வர்தா புயல் தாக்கத்தால் காற்று பலமாக வீசி பேயாட்டம் ஆடிய நிலையில் சிறிது நேரம் திடீரென பெரும் மயான அமைதியாக காற்று வீசாமல் இருந்தது.
சென்னை: வர்தா புயலின் தாக்கத்தில், சென்னை நகரமே மூழ்கப் போகிறது என நாசா' எச்சரித்துள்ளதாக வாட்ஸ்ஆப்பில் புரளி ஒன்று வைரலாக பரவிய நிலையில் திடீரென மயான அமைதி நிலவியது பெரும் பீதியை ஏற்படுத்தியது.
சென்னைக்கு அருகே வர்தா புயல் அதிவேகமாக கரையை கடந்து வருகிறது. சென்னையில் பலத்த மழையுடன், பலத்த காற்று வீசியது.
புயலின் விட்டம் 90 கி.மீ எனவும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் பழவேற்காடு வரைக்கும் புயலின் நீளம் உள்ளது எனவும் கூறியுள்ளது வானிலை ஆய்வு மையம்.
வர்தா புயலின் கோரத்தாண்டவத்தால் சென்னை மாநகரில் ஆங்காங்கே மரங்கள் முறிந்துள்ளன. மயிலாப்பூரில் மரங்கள் விழுந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை மூழ்குகிறதா?
இதனிடையே வர்தா புயலின் தாக்கத்தால் சென்னை நகரே மூழ்க போவதாக நாசா ஆய்வு மைய அலுவலகம் எச்சரித்துள்ளதாகவும், இதனால் சென்னையில் இருந்து மக்கள் வெளியேறி பாதுகாப்பான வேறு ஊர்களுக்கு சென்று விடுமாறும் வாட்ஸ்ஆப்பில் புரளி ஒன்று பரவி வருகிறது.

அச்சம் தேவையில்லை
மக்கள் யாரும் இதனை நம்ப வேண்டாம் எனவும், புயல் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அமைதியான புயல்
அடுத்த அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பு கருதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதே நேரத்தில் அம்மா கடற்கரையில் உறக்கம் கொள்வதால் வர்தா புயலே அமைதியாகிவிட்டதாகவும் தனி செய்தி ஒன்று உலா வருகிறது.

பலத்த மழைக்கு வாய்ப்பு
புயலுக்கு முன் பெரும் அமைதி என்பார்கள். நள்ளிரவு முதல் காற்றுடன் கனமழை பெய்த நிலையில் காலை முதல் பலத்த காற்று வீசியது. இப்போது மயான அமைதி நிலவுகிறது. ஆனால் மேகக் கூட்டம் நகர்வதைப் பார்த்தால் பலத்த மழை பெய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இயற்கை சீற்றம்
டிசம்பர் மாதம் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை இயற்கை சீற்றம் என்று ஏற்கனவே பஞ்சாங்கத்தில் கூறியுள்ளது. அதன்படி காற்றின் வேகமும், மழையும் கோரத்தாண்டவமாடியது. பிற்பகல் 3 மணிக்கு மேல் காற்றின்றி அமைதியாக மாறியது வானிலை. சென்னையில் சுனாமி தாக்கும் முன்பாக பறந்த பறவைகளைப் போல பல்லாயிரக்கணக்கான பறவைகள் வானில் வட்டமிட்டு எதையோ உணர்த்துகின்றன.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications