பணிப் பதிவு அட்டைகளுக்குள் பணம்: அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
அரியலூர்: 100 நாள் பணிப்பதிவு அட்டைகளுக்குள் வைத்து ஓட்டுக்கு பணம் வழங்கிய அ.தி.மு.க.வினரை கைது செய்ய கோரி தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாடளுமன்ற தேர்தல் களம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு பணத்தை வாக்காளர்களுக்கு பணத்தை பல வழிகளில் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அரியலூர் மாவட்டம் செந்துறையில் காலணி குடியிருப்பு பகுதிகளில் 100 நாள் வேளைக்கு சென்ற தொழிலாளர்களுக்கு தலா 200 ரூபாய் பணத்தை பணி பதிவு அட்டையின் உள்ளே வைத்து அ.தி.மு.க.வினர் வழங்கியுள்ளனர்.
அட்டைகள் பறிமுதல்
இந்த தகவல் அந்த பகுதியில் பரவியதால், அங்கே பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், விநியோகம் செய்ய வைத்திருந்த 75க்கும் மேற்பட்ட பணத்துடன் கூடிய பணிப்பதிவு அட்டைகளை அவர்கள் கைப்பற்றினர்.
சாலை மறியல்
இதைத்தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகள் மீறி அ.தி.மு.க.வினர் பண பட்டுவாடா செய்கிறார்கள். அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி அரியலூர்- செந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதிகாரிகள் உறுதி
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செந்துறை காவல்துறையினர், கண்டிப்பாக அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தா.பாண்டியன் குற்றச்சாட்டு
இதேபோல நாகப்பட்டினம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக கையும் களவுமாக பிடித்துக் கொடுத்தும் ஆளுங்கட்சியினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தா. பாண்டியன் குற்றம் சாட்டினார்.
தேனியில் பொன் முத்துராமலிங்கம் மறியல்
வாக்காளர்களுக்ககு பணம் வழங்கிய அ.தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி தேனி தொகுதி தி.மு.க.,வேட்பாளர் பொன் முத்துராமலிங்கம் உள்ளிட்ட கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கார் ஜப்தி
தண்புபாளையத்தில் அ.தி.மு.க.,வினர் பணம் விநியோகம் செய்த போது, பணத்தை பொன் முத்துராமலிங்கம் பறிமுதல் செய்து, அதனையும் காரையும் ஜப்தி செய்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
தவெகவில் சீட் கிடைக்காத விரக்தி.. திமுகவில் இணைந்தார் அஜிதா! பின்னணியில் அனிதா! -
“இனி அறுவடை தான்.. தோழமைக் கட்சியினருடன் இணைந்து வேலை செய்யுங்க”.. ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்! -
எகிறி அடிக்க ரெடியாகும் வில்லிவாக்கம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆப்பு! திமுக இறக்கிய முக்கிய ஆயுதம்! -
அதிமுகவுக்கு விவசாய அமைப்பு, ரஜினி ரசிகர் மன்றம் வரிசையில் மேலும் ஒரு அமைப்பு ஆதரவு! இபிஎஸ் ஹேப்பி! -
4300 கோடி சொத்து இருந்தும் லீமா ரோஸ் அடித்த பல்டி? எடப்பாடி பழனிசாமி கணக்கை மாற்றிய ரிவர்ஸ் உத்தி -
'இல்லத்தரசி' கூப்பன்.. எப்படி வழங்கப்படும்? இப்போதே திட்டத்தை கையில் எடுக்கும் திமுக? கசிந்த தகவல்! -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு.. பரபரக்கும் கரூர்! -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்!












Click it and Unblock the Notifications