3 நாட்களாகியும் மாயமான விமானம் குறித்து தகவல் இல்லை: 3 பேர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு
சென்னை: சென்னையில் இருந்து கிளம்பி மாயமான கடலோர காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் விமானம் பற்றி இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் விமானத்தில் இருந்த 3 பேர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது.
சென்னையில் இருந்து கடந்த 8ம் தேதி மாலை 6 மணிக்கு பாக் ஜலசந்திக்கு கடலோர காவல்படையைச் சேர்ந்த டோர்னியர் ரக விமானம் ரோந்து பணிக்கு கிளம்பியது. விமானத்தில் விமானி வித்யாசாகர், துணை விமானி எம்.கே.சோனி, திசைகாட்டி சுபாஷ் சுரேஷ் ஆகியோர் இருந்தனர். இந்நிலையில் விமானம் சென்னைக்கு திரும்பி வரும்போது மாயமானது. விமானத்தை தேடும் பணியில் 7 கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.

இருப்பினும் விமானம் பற்றி இதுவரை எந்தவித தகவலும் கிடைக்காததால் அதில் இருந்தவர்கள் உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது. புதுச்சேரியில் கடலில் மீன் பிடித்த மீனவர் கொடுத்த தகவலின்பேரில் அங்கு விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து கடலோர காவல்படையின் கிழக்கு மண்டல ஐ.ஜி. எஸ்.பி. சர்மா கூறுகையில்,
விமானம் மாயமானது பற்றி கடலோர காவல்படையின் டைரக்டர் ஜெனரல் எச்.சி.எஸ். பிஸ்த் தலைமையில் புதன்கிழமை ஆலோசனை நடந்தது. அப்போது விமானத்தை தேடும் பணியில் மேலும் 7 கப்பல்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது 2 நீர்மூழ்கி கப்பல்கள் உள்பட 15 கப்பல்கள் விமானத்தை தேடி வருகின்றன. இருப்பினும் விமானம் குறித்து இதுவரை எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என்றார்.
பிச்சாவரம் இடையே 70 கிலோமீட்டர் சுற்றளவில் விமானத்தை தேடி வருகிறார்கள். தேடும் பணியில் 200 அதிகாரிகள், 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று கடலோர காவல்படை குழும டி.எஸ்.பி. ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் புதுச்சேரி அருகே கடலில் எண்ணெய் படலம் மிதப்பது புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டு எண்ணெய் மாதிரி சேகரிக்கப்பட்டு அது மாயமான விமானத்தினுடையதா என்பதை அறிய சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications