3 நாட்களாகியும் மாயமான விமானம் குறித்து தகவல் இல்லை: 3 பேர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு
சென்னை: சென்னையில் இருந்து கிளம்பி மாயமான கடலோர காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் விமானம் பற்றி இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் விமானத்தில் இருந்த 3 பேர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது.
சென்னையில் இருந்து கடந்த 8ம் தேதி மாலை 6 மணிக்கு பாக் ஜலசந்திக்கு கடலோர காவல்படையைச் சேர்ந்த டோர்னியர் ரக விமானம் ரோந்து பணிக்கு கிளம்பியது. விமானத்தில் விமானி வித்யாசாகர், துணை விமானி எம்.கே.சோனி, திசைகாட்டி சுபாஷ் சுரேஷ் ஆகியோர் இருந்தனர். இந்நிலையில் விமானம் சென்னைக்கு திரும்பி வரும்போது மாயமானது. விமானத்தை தேடும் பணியில் 7 கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.

இருப்பினும் விமானம் பற்றி இதுவரை எந்தவித தகவலும் கிடைக்காததால் அதில் இருந்தவர்கள் உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது. புதுச்சேரியில் கடலில் மீன் பிடித்த மீனவர் கொடுத்த தகவலின்பேரில் அங்கு விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து கடலோர காவல்படையின் கிழக்கு மண்டல ஐ.ஜி. எஸ்.பி. சர்மா கூறுகையில்,
விமானம் மாயமானது பற்றி கடலோர காவல்படையின் டைரக்டர் ஜெனரல் எச்.சி.எஸ். பிஸ்த் தலைமையில் புதன்கிழமை ஆலோசனை நடந்தது. அப்போது விமானத்தை தேடும் பணியில் மேலும் 7 கப்பல்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது 2 நீர்மூழ்கி கப்பல்கள் உள்பட 15 கப்பல்கள் விமானத்தை தேடி வருகின்றன. இருப்பினும் விமானம் குறித்து இதுவரை எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என்றார்.
பிச்சாவரம் இடையே 70 கிலோமீட்டர் சுற்றளவில் விமானத்தை தேடி வருகிறார்கள். தேடும் பணியில் 200 அதிகாரிகள், 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று கடலோர காவல்படை குழும டி.எஸ்.பி. ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் புதுச்சேரி அருகே கடலில் எண்ணெய் படலம் மிதப்பது புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டு எண்ணெய் மாதிரி சேகரிக்கப்பட்டு அது மாயமான விமானத்தினுடையதா என்பதை அறிய சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications