குஜராத்தில் திகு திகு.. ஆர்.கே.நகரில் விறுவிறு.. நாளையோடு முடிகிறது தேர்தல் பிரச்சாரம்
ஆர்.கே நகரில் வேட்பாளர்களின் இடைத்தேர்தல் இறுதிக்கட்ட பிரச்சாரம் நாளை மாலையோடு முடிவடைய உள்ளது .
சென்னை : ஆர்.கே நகரில் நாளையோடு தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளதால், வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு உள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவின் காரணமாக அவரின் தொகுதியான ஆர்.கே நகரில் இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் சூழலில், வேட்பாளர்களின் இறுதிக்கட்ட பிரச்சாரம் சூடு பிடித்து உள்ளது.

தி.மு.க சார்பில் மருதுகணேஷ், அ.தி.மு.க சார்பில் மதுசூதனன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம், பா.ஜ.க சார்பில் கரு.நாகராஜன் ஆகியோரும், சுயேச்சை வேட்பாளராக டி.டி.வி தினகரனும் களத்தில் உள்ளனர். இவர்கள் போக பல வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் தி.மு.க., அ.தி.மு.க., சுயேச்சை வேட்பாளர் தினகரன் ஆகியோரிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.
இந்த தேர்தலில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தி.மு.க.,வை ஆதரித்து உள்ளன. தங்கள் பலத்தை காட்ட ஆளும்கட்சியான அ.தி.மு.க பல்வேறு அமைச்சர்களை பிரச்சாரத்தில் இறக்கி உள்ளது. இவர்களோடு சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிடும் டி.டி.வி தினகரன் கடுமையாக போட்டி போட்டு பிரச்சாரம் செய்து வருவதால் ஆர்.கே நகரில் யார் வெற்றி பெறுவார்கள் என்று பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ஒருபுறம் கடுமையான பிரச்சாரம் நடந்து வந்தாலும் மறுபக்கம் தேர்தல் ஆணையத்தின் தீவிர கண்காணிப்பையும் மீறி ஆர்.கே நகரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக, தி.மு.க சார்பில் அ.தி.மு.க மீதும், டி.டி.வி தினகரன் அணியின் மீதும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆர்.கே நகரில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தேர்தல் வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக பிரச்சாரம் முடித்துக்கொள்ள வேண்டும் என்கிற விதி இருப்பதால், ஆர்.கே நகரில் நாளை மாலையோடு பிரச்சாரம் முடிவடைய உள்ளது. இதனால், வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
-
மகளிர் உரிமை தொகை.. இந்த மாதம் வராது.. ஆனால் தேடி வரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Nanjil Sampath: விஜய் அனுபவம் குறைந்தவர்.. குறை உள்ளது.. நாஞ்சில் சம்பத் தடாலடி பேச்சு -
Samson: சொந்த கேப்டன், பயிற்சியாளரால் ஏற்பட்ட அவமானம்.. காத்திருந்து கம்பேக் கொடுத்த சஞ்சு சாம்சன்! -
தொடக்கூடாத கையைத் தொட்டதா ஈரான்? ஜப்பான் செய்த அதே தவறு.. 30 விநாடியில் மாறப்போகும் உலக வரைபடம்! -
சங்கீதா கொடுத்த விவாகரத்து வழக்கு.. விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த மகன் ஜோசன்.. புது பஞ்சாயத்து -
திமுக விஸ்வரூபம் எடுத்துவிட்டது.. அதிமுக தலைவர்களை இணைப்பதன் பின்னணி இதுதான்.. பத்திரிகையாளர் மணி! -
1 ராஜ்ய சபா, 23 தொகுதிகள்.. காங்கிரஸ்க்கு மார்ச் 3 வரை கெடு.. தொகுதி பங்கீடு பேச்சில் நடந்தது என்ன? -
அப்போ விரிசல் உண்மைதான் போல.. மோடி கூட விஷ் பண்ணிட்டாரே.. ஸ்டாலினை தாமதாக வாழ்த்திய ராகுல் -
டேஞ்சர்.. சிவப்புக் கொடியை ஏற்றிய ஈரான்.. இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? -
எடப்பாடி எதுக்குத் தான் இருக்காரு.. அதிமுகவை அண்டர் கண்ட்ரோலில் எடுத்த அமித் ஷா! குமுறும் ர.ர.க்கள்! -
சிபிஎஸ்இ 10 & 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு.. மத்திய கிழக்கு மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு -
இந்திய அணி ஏமாற்றி வென்றுவிட்டது.. ஹெட்மயர் விக்கெட்டில் ஐசிசி தில்லு முல்லு.. முகமது ஆமீர் புகார்!












Click it and Unblock the Notifications