காற்றழுத்த தாழ்வு.. மன்னார் வளைகுடா மீனவர்கள் உடனடியாக கரைதிரும்ப விமானம் மூலம் எச்சரிக்கை
மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என விமானம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என விமானம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கன்னியாகுமரி கடற்பகுதியில் பலத்த காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விமானம் மூலம் எச்சரிக்கை
இந்நிலையில் மன்னார் வளைகுடாவில் உள்ள மீனவர்களுக்கு விமானம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கரைதிரும்ப டோர்னியர் விமானம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஓகி புயல்
மேலும் ரோந்து பணியும் நடைபெற்று வருகிறது என்று இந்திய கடலோர காவல் படை தகவல் தெரிவித்துள்ளது. ஓகி புயலால் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் பலர் மாயமாகினர்.

அரசின் அலட்சியம்
அவர்கள் இதுவரை கரை திரும்பாத நிலையில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அரசின் அலட்சியமே மீனவர்கள் உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.

முன்னெச்சரிக்கை
இந்நிலையில் தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறக்கூடும் என்பதால் தமிழக அரசு முன்கூட்டியே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications